பக்கங்கள்

29 அக்டோபர் 2017

இலங்கையில் இன்னும் சித்திரவதை முகாம்கள்!


இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார். 
இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார். சித்திரவதை முகாம்களில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சுமார் பத்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பல்வேறு நாடுகளில் யஸ்மின் சூக்கா அரசியல் தஞ்சம் பெற்றுக் கொடுத்துள்ளார். அத்துடன் அவர் இலங்கைக்கு எதிராக இதுவரை சுமார் 25 அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளுக்கு சமர்ப்பித்துள்ளார்.வேறு எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அவர் இந்தளவு அறிக்கைகளை சமர்ப்பித்ததில்லை.இவ்வாறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.