பக்கங்கள்

26 செப்டம்பர் 2017

சிறுவனின் கையை முறித்த கொடூரன்!

பருத்தித்துறை பகுதியில், 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தையும் அதை வேடிக்கை பார்த்த தாயையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர். சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபரே சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.