பக்கங்கள்

03 ஏப்ரல் 2017

வேலணையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

வேலணை துறையூரை சேர்ந்த மாணவி ஒருவர் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீட்டினர் ஆலயத் திருவிழாவிற்கு சென்றிருந்த வேளை,தனிமையில் இருந்த மாணவி வீட்டின் அறையினில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பல்கலைக்கழகம் சென்று வீடு திரும்பிய சகோதரி ஒருவர் மூலமாக குறிப்பிட்ட மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்தது.எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.கல்விப் பொது தராதர பரீட்சை பெறுபேறுகள் கடந்தவாரம் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த மாணவி பதினாறு வயதுடைய அருட்பிரகாசம் ரேணுகா என அறியவந்திருக்கின்றது.இவர் 1A 7B 1S என்ற பெறுபேற்றை பெற்றுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.