பக்கங்கள்

29 மார்ச் 2015

புளியங்கூடல் காட்டு வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

புளியங்கூடல் கிராஞ்சியம்பதியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு காட்டு வைரவர் ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில்,மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையிலே (30.03.2015)திங்கட்கிழமை மற்றும் (31.03.2015)செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் விஷேட பூஜைகள் நடைபெற்று பின்னர்(01.04.2015)புதன்கிழமை மகா கும்பாபிஷேகப்
பெருவிழா ஆரம்பமாகி நடைபெற உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாக நம்பப்படும் காட்டு வைரவர் ஆலய பின் பகுதியில் கல் ஒன்று வளர்ச்சி பெற்று வருவது ஊர் மக்களின் நம்பிக்கைக்கும் ஆச்சரியத்திற்கும் உரிய ஒன்றாக நோக்கப்படுகின்றது.ஆலயத்திற்கு நன்கொடைகள் அளிக்க விரும்பும் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஊர் மக்கள் ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.