பக்கங்கள்

06 ஜனவரி 2015

கோத்தாவுடன் ஓடத் தயாராகும் கருணா… பிள்ளையான்!

தற்போது மகிந்தவின் தோல்வி நிச்சயப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டை விட்டு தப்பியோட முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மலேசியா அல்லது சிங்கபூருக்கு இவர்கள் தப்பிச் செல்லக்கூடும் என்று கொழும்பின் முக்கிய வட்டாரங்கள் மூலமாக அறியமுடிகிறது.முள்ளிவாய்க்கால் வரை யுத்தத்தை வழிநடத்தியது கருணாவே . இவர் போட்டு கொடுத்த திட்டத்தின் படியே இராணுவம் தனது போரை நடத்தி மக்களையும் புலிகளையும் அழித்தது. அதன் நன்றிக் கடனுக்காவே கோத்தபாயாவின் ஏற்பாட்டில் ஆசிய நாட்டுக்கு தப்பிச்செல்ல ஏற்பாடு செய்யப் பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கருணாவை கைது செய்தால் மகிந்தவின் போர் குற்றங்கள் அம்பலமாகி விடும் என்பதாலேயே இந்த நகர்வுகள் நகர்த்தப்பட்டு வருகின்றனவாம். அவ்விதம் கருணா தப்பி செல்லாவிட்டால் அவரை இராணுவம் படுகொலை செய்யும் என்றே அந்த முக்கிய வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது . எதிர் வரும் நிமிடங்களில் இவற்றில் ஏதாவது நடக்கலாம் என்பதே அந்த பர பரப்பு . மேலும்நான்கு நாட்கள் உள்ள நிலையில் இந்த பர
பரப்புக்கள் அரேங்கேறி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.