![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwHpyCCL7NEisWb3cO_8vkqWHTKyNPFVjQioxDDikUQLndhGGDcwebW__9zSr4TIU2KL55KdU2qTl9dSFkOCI7MW0MtOs2bW1mWzPu_oH9DC2XFF62slKdjVSWmPu1M2PrkEk6hLRRwZjZ/s400/titlephoto.jpg)
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக் கடிதத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு 15 அம்சங்கள் கொண்ட நிபந்தனைக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.குறித்த கடிதத்திற்கான உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவிதமாக தொடர்புகளையும் பேணுவதில்லை என வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக இலங்கை உத்தியோகபூர்வமாக பதிலளிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.