
அடிமை வாழ்வில் சிக்கியிருந்த தமிழ் மக்கள் அடிமை வாழ்வு நீங்கி சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக அன்னையின் மகன் தன்னை அற்பணித்தார். அதனால் அவர் தனது தாய்க்குரிய கடமைகளை ஆற்ற முடியவில்லை. அவரது சகோதரர்களும் தமது தாய்க்குரிய கடமைகளை ஆற்ற முடியாத நிலையிலுள்ளனர்.
இந்நிலையில் அன்னைக்குரிய கடமைகளை ஆற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தமிழ்த் தேசத்து மக்கள் அனைவரும் தங்களது அன்னையாகக் கருதி பார்வதி அம்மாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அன்னைக்கு இறுதி வணக்கம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.