
சன் சீ கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களா என தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் 1996ஆம் ஆண்டு கரேஜில் வேலைக்குச் சேர்ந்த தான், அங்கு வேலை செய்த 6 மாத காலத்திற்குள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ, அவர்களது உறுப்பினராகவோ ஒருபோதும் செயற்பட்டதில்லை என சன் சீ கப்பல் அகதி ஒருவர் கனேடிய பாதுகாப்புப் பிரிவினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்த 492 இலங்கை அகதிகளில் 6 பெண்கள் உட்பட 107 பேர் கனேடிய பாதுகாப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.