
இந்தப் படகு கொழும்பு டொக்யாட் நிறுவனத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருகோணமலை ஊடாக குறிகாட்டுவான் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தப் படகு நாளை திங்கட்கிழமை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படும் என படகை எடுத்து வந்த இலங்கைக் கடற்படை ஓட்டிகளான குணசிங்க, நவரட்ண ஆகியோர் தெரிவித்தனர். படகில் தண்ணீர் வசதிகள் மலசல கூடவசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன் 100 பயணிகளுக்கு மட்டும் என அறிவித்தலும் போடப்பட்டுள்ளது.படகின் கீழ்த்தட்டில் அதிக இருக்கைகள் போடப்பட்டுள்ளதுடன் மேல் தட்டில் குறைந்த அளவிலான இருக்கைகளும் உள்ளன. நேற்று சனிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களும் படகைப் பார்வையிட்டனர்.திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் படகு கையளிக்கப்படினும், சேவை ஆரம்பமாவது குறித்த முடிவு அமைச்சர்களின் அறிவிப்பிலேயே தங்கியுள்ளதாகவும் தெரிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.