
ஜெனீவாவில் நாளை (28) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைக் கவுன்சில் தொடர்பான அமர்வின் போது இலங்கைக்கெதிரான குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சந்தர்ப்பம் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்டர் பெய்த் இன்டர்நெஷனல் மற்றும் தமிழர் மனித உரிமைக் கவுன்சில் என்பவற்றின் தலைவரான விஸ்வலிங்கம் கிருபாகரனுக்கே அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது. மனித உரிமைக்கவுன்சில் அமர்வின் போது அவர் இலங்கைக்கு எதிரான ஆதாரங்களை முன் வைக்கவுள்ளார்.
இச்செய்தி கேள்விப்பட்டவுடன் அவர் விடுதலைப் புலிகளின் அபிமானி என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரது குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
கனேடிய உளவுத்துறையும் அவர் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று பட்டியலிட்டுள்ளது. அவ்வளவையும் மீறி நாளை அவர் மனித உரிமைக் கவுன்சில் பேரமர்வில் உரையாற்ற உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.