
களத்தில் கேட்கும் கானங்கள் இசைநாடாவில் இடம்பெற்ற நடடா ராஜா மயிலக்காளை என்ற பாடல் உட்பட்ட பெருமளவான ஈழவிடுதலை எழுச்சிப் பாடல்களையும் பாடியுள்ளார்.
இவரது மகன் யுகேந்திரன், பின்னணிப்பாடகராகவும், நடிகராகவும் இருக்கிறார். இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப்பாடகராக உள்ளார்.
சமீபகாலமாக மலேசியாவாசுதேவன் உடல் நலக்குறைவால் வீட்டிலேயே இருந்தார். தன்னால் வளர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் தன்னை வந்து நலம் விசாரிக்கவில்லை என்று ஒரு பேட்டியில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
அவர் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் இன்று பகல் 1 மணிக்கு மலேசியா வாசுதேவன் சிகிச்சை பலனின்றி காலமானார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.