
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க எண்ணியுள்ளோம். பல வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் பூந்தோட்டம் மயானத்தை புனரமைத்து எரிவாயு மூலம் சடலங்களை எரிப்பதற்கு ஏற்றவாறு அமைக்கவுள்ளோம். அதற்கான ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுவிட்டது.
இதேவேளை பல நிறுவனங்கள் எமது நகரசபைக்கு உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளனர். கடந்த வருடம் 16 கோடி ரூபாவுக்கு அபிவிருத்தி வேலைகளை நகரசபையின் மூலம் ஏற்படுத்தி உள்ளோம்.
எதிர்வரும் வருடம் 15.5 கோடிக்கு பாதீடு செய்துள்ளபோதிலும் எமது உறுப்பினர்கள் சிலர் சுயலாபம் தேடுவதற்காக பாதீட்டினை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக குழப்பம் விளைவிப்பார்களே தவிர மக்களுக்கு தேவையானதை செய்துமுடிக்க எண்ணாதவர்கள். அவர்களின் மூலமே வவுனியாவின் அபிவிருத்தி பாதிப்படைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.