
அதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசுபக்கம் தாவிய சிலருக்கு மீண்டும் தமது பழைய கட்சிக்கே திரும்பிவிடுவது குறித்து சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
அரசாங்கத்தின் உயர்மட்டமுக்கியஸ்தர்கள் செல்வாக்கிழந்து வருகின்றமை, கட்சிக்காகப் பாடுபட்டவர்களைவிட ராஜபக்ச குடும்பத்தினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை என்பன போன்ற செயற்பாடுகளே ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியிருப்ப தாகவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரஸ்தாப அறிக்கை கிடைத்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள அமைச்சர்களைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, உள்ளூராட்சித் தேர்தலின்பின் அவர்களுக்கு முக்கியத்துவம் மிக்க அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதாக வாக்களித்துள்ளதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.