
எனினும் அங்கு கலந்து கொண்ட அதிகாரிகள் ஏற்கெனவே பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் புதியவர்களது பதிவுகளை மட்டும் இணைத்துக் கொள்ளலாம் என ஆலாசனை கூறினர். எனினும் படைத்தரப்பு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உடுவில், சங்கானை, சுன்னாகம், சண்டிலிப்பாய், மானிப்பாய் மற்றும் தெல்லிப்பழை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கான குடும்பப்பதிவுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கூறியுள்ளது.
ஏற்கெனவே கல்வியங்காடு, கோப்பாய், உள்ளிட்ட பகுதிகளில் இந்த பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வலிகாமம் பகுதியிலும் இந்த நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம்காட்டி குடும்பப்பதிவு நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.