
இறுதி அஞ்சலிக்காக தமிழகத்தில் இருந்து சென்ற திருமாவளவனை கொடுங்கோல் ஆட்சி இலங்கை திருப்பி அனுப்பிய பிறகு, தாயாரின் சடலம் எரியூட்டப்பட்ட பிறகு அங்கு தெருவில் திரிந்த நாய்களை கொன்று தாயார் பார்வதியம்மாளை எரித்த இடத்தில் எரித்துள்ளனர் சிங்கள ராணுவத்தினர்.
தொடர்ந்து இதுபோல அவமரியாதை செயல்களில் ஈடுபடும் ராஜபக்சேவை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மாற்று செயலணி மற்றும் தமிழ் உணர்வாளர்களை இணைத்து கண்டன பேரணி நடத்தி ஐநா அலுவலகம் மற்றும் இலங்கை தூதரகத்தில் மனு கொடுப்பதுடன்,
பார்வதி அம்மாளுக்கான கண்ணீர் அஞ்சலி கூட்டமும், இலங்கை அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நாளை மறுநாள் 2.3.2011அன்று நடைபெறும் என்று மாற்று செயலணி தலைவர் கலைவாணர் அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.