
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளின் இறுதி அஞ்சலி நிகழ்வு வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கத்தில் நடைபெற்றபோது அஞ்சலி உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதாகவோ, ஒதுக்கப்பட்டதாகவோ இலங்கை அரசாங்கமும் அதனோடு இணைந்தவர்களும் கூறிக்கொள்வது பகல் கனவு காண்பதைப் போலாகும். கடந்த சில வாரங்கள் குடாநாட்டில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது.
இதனைக் காரணங்காட்டி வீதிக்கு வீதி இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததாகக் கூறும் அரசாங்கம் தலைவர் பிரபாகரனின் தாயாரின் இறுதி நிகழ்வின்போது கலந்து கொள்பவர்களுக்கு பல சிரமங்களைக் கொடுத்து வருகிறது. 81வயதுடையவரின் மரணச்சடங்கு கூட அவர்களுக்கு புளியைக் கரைத்துள்ளது. தமிழ் மக்களது போராட்டம் முடிந்துவிடவில்லை.
எந்த அரசாங்கம் வந்தாலும் அடக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் எல்லாப் பகுதியிலுமிருந்து கிளர்ச்சி ஏற்படும். தலைவர் பிரபாகரனின் தாயாரது இறுதி அஞ்சலி நடைபெறும் இடமானது வீரம் செறிந்த மண். தலைவரின் தாய் தந்தையர்கள் அமரர்கள் வேலுப்பிள்ளை, பார்வதியம்மா ஆகியோரின் மூச்சு இந்தக் காற்றில் கலந்துள்ளது. பல மாற்றங்களை உருவாக்கிய இம் மண் அடுத்தக் கட்ட போராட்டத்தின் கால்கோளாக இது இருக்கும் எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.