
நாகை,காரைக்கால்,புதுக்கோட்டை, இராமேசு வரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்டனர்.
மத்திய,மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர முயற்சியால் தமிழக மீன வர்களை இலங்கை கடந்த வெள்ளிக்கிழமை விடுவித்தது.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை காலை நாகை துறைமுகப் பகுதிக்கு வந்தனர்.அப்போது மீனவர்கள் இலங்கையில் தாங்கள் சிறைப்பிடிக்கப்பட்டது குறித்துக் கூறினர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வரை இலங்கை மீனவர்களும்,இலங்கைக் கடற்படையினரும் தமிழக மீனவர்களை சிறைப்பிடிக்கத் தொடர்ந்து ரோந்து வந்து கொண்டிருந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்களே தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டு, கற்கள் ஆகியவற்றை வீசித்தாக்கினர். இலங்கை மீனவர்கள் அழைத்ததும் அவர்களுடன் சென்ற தமிழக மீனவர்கள் தாக் கப்படவில்லை.
அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றவர்கள் மீதே இலங்கை மீனவர்கள் கடும் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை மீனவர்களுக்கு பாதுகாப்பாக இலங்கைக் கடற்படை யினர் செயல்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் வடமராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பின்னர் அங்கிருந்து பருத்தித்துறை காவல் நிலை யத்துக்குக் கொண்டு சென்றனர்.
புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காவல் நிலையத்துக்கு வந்து மீனவர்களைச் சந்தித்தார். அப்போது நீங்கள் எல்லை தாண்டி வந்தது தவறுதானே என்றார். மறுத்துப் பேச முடியாத நிலையில் நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதே கேள்வி,நீதி மன்றத்திலும் கேட்கப்பட்டது அங்கும் ஒப்புக்கொண்டோம்.
தமிழக மீனவர்களின் படகுகளிலிருந்து ஜி.பி.எஸ் கருவிகளையும், மீன்களையும் இலங்கை மீனவர்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் ஒவ்வொரு படகுக்கும் சுமார் ரூ 50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.