
இச் செய்தியை நாம் பிரசுரிக்கும் வேளை, லிபிய நாட்டு வெளியுறவு அமைச்சர், தாம் போராட்டம் நடத்தும் எந்த ஒரு மக்கள் மீது தாக்குதல் நடத்தமாடோம் என்றும், தாம் தமது இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அமெரிக்கா கேணல் கடாபியை பதவி விலகுமாறு கோரியுள்ளது. அது நடைபெறாவிட்டால் தாக்குதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபிய நாட்டில் உள்ள விமான எதிர்ப்புக் கட்டமைப்புகளை முதலில் தாக்கியழித்து, பின்னர் நேட்டோ கூட்டுப்படைகளை லிபியாவில் தரையிறக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், விமானத் தாக்குதல்களை பிரித்தானியா முன்னெடுக்க உள்ளதாக அறியப்படுகிறது.
இருப்பினும் லிபிய அதிபர் கேணல் கடாபி, உடனடியாக செயல்பாட்டில் இறங்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. இல்லையே சதாம் குசைன்போல சிறைப்பிடிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.