
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் பேசினார்.
அவர் பேசும்போது, ’’புதுக்கோட்டையை புலிக்கோட்டையாகவும், வடகாட்டை வவுணியாவாகவும் மாற்றியவர் முத்துக்குமார். எங்களுக்கெல்லாம் பாடமாமாக திகழ்ந்தவர் இன்று என்முன் படமாக உள்ளார்.
எவ்வளவோ கூட்டத்தில் நான் பேசியுள்ளேன் அப்போதெல்லாம் எனக்கு பாதுகாப்பாகநிற்பார் முத்துக்குமார், ஆனால் அவரது இழப்பு எங்களுக்கான பாதுகாப்பை எண்ணிப்பார்க்க தூண்டுகிறது.
தன்மீதான பற்றைவிட, தமிழினத்தின்மீது கொண்டிருந்த அளப்பெரிய பற்றுதான் எங்களை இணைத்தது. இன விடுதலைக்காக களமாடியவர்களில் ஒருவர் முத்துக்குமார். உன்னை இழந்து தவிக்கும் சோகத்தை யாரிடத்தில் சொல்லுவது என்று தெரியவில்லை.
உன் இறப்பு என்னைத் தவிக்ககவைக்கிறது, ஒரு கணம் சிந்திக்கிறேன் நானும் செத்துவிடலாமோ என்று, ஆனால் அதே மறுகணம் விடுதலைப்புலிகளின் பிரபாகரன் சொன்னதை நினைவூட்டுகிறேன், இனத்தின் உயிர்கள் சடலத்தை என் கையில்
தவளவிட்டுருப்பேன், அதுதான் என்னை தமிழினத்தின் மீது பற்றையும், துணிவையும் கொடுத்திருப்பதாக நான் எண்ணுகிறேன் என்பதை.
அதையே பின்பற்றுகிறேன், வஞ்சம் வைத்து முத்துக்குமாரைப்பறித்தவர்களை வஞ்சம் தீர்ப்பேன். இதுதான் தமிழீழ விடுதலைக்கான அடித்தளம்.
இதுதான் காலத்தின் கட்டாயம். என் இனத்தின்மீது இனி எவனும் கைவைக்க அஞ்ச வேண்டும். இதுதான் எங்களின் லட்சியம்திமுக தலைவர் கலைஞர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் காவல்துறையை நம்பினோம்.
நான் என்ன செய்தேன் கொள்ளை அடித்தேனா, கொலை செய்தேனா, இல்லை ரூ. 1.76 ஆயிரம் கோடியை உங்களைப் போல் நான் திருடினேனா. இதைத்தானே நான் எதிர்த்தேன். ஒரு மரணம் தேசத்துரோகம் என்றால், ராஜீவ்காந்தியால் எம் இனமே அழிந்துகொண்டிருக்கிறதே அது தேசத் துரோகம் இல்லையா.
காந்தியை தந்தை என்றும், நேருவை மாமா என்றும், சோனியாவை அன்னை என்றும் அழைக்கலாம். ஆனால், பிரபாகரனை அண்ணன் என்றால் என்மீது வழக்கு’’என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.