
வழமைக்கு மாறாக நேற்றுக் காலை முதல் மாலை வரை வடமராட்சிக் கடற்பரப்பில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இந்தியக் கடற்படையினரின் அதிவேகப் படகுகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் கடலில் தொழிலுக்குச் சென்ற வல்வெட்டித் துறை ஆதிகோயிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் கடலில் வைத்து இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.
கடந்த மூன்று நாள்களில் இந்திய மீனவர்களால் கடத்தப்பட்ட ஐந்தாவது மீனவர் இவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.