
இன்று மாலை மஹிந்த ராஜபக்ஷ மன்னாரில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிவிட்டு கொழும்பு திரும்பிக் கொண்டிருந்த ஹெலிகொப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் இன்று மாலை மூன்றரை மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதனையடுத்து ஹெலிகொப்டர் அவசர அவசரமாக பாராளுமன்றத் திடலில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அதன் பின் தனது உத்தியோகபூர்வ வாகனங்களை வரவழைத்த மகிந்த அங்கிருந்து காரிலேயே அலரிமாளிகைக்குச் சென்றுள்ளார்.
கோளாறுக்குள்ளான ஹெலிகொப்டர் இன்னும் பாராளுமன்றத் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதுடன், மின்மாற்றிகளை உபயோகித்து அதன் கோளாறைச் சரி செய்யும் நடவடிக்கைகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.