அழகிகளின் அணுவகுப்பு விழா ஒன்றை நடத்தி சிறீலங்கா அரச அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கொழும்பில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: கொழும்பில் உள்ள ஆடம்பரவிடுதிகளில் ஒன்றான ஹில்டன் ஆடம்பரவிடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் அழகிகளின் அணிவகுப்புடன், அமைச்சர்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் உயர் வகை மதுபானங்களும், உணவுகளும் வழங்கப்பட்டதுடன், பெண்களை தெரிவுசெய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அழகுக்கலை நிபுணரான அனுசா ராஜபக்சாவின் ஏற்பாட்டின்பேரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ரானியா, தேசா, சப்னா, றொசெல்லா, பிளங்கற், ஹர்சினி, ஈரோ, திரிசா (தென்னிந்திய நடிகையல்ல), ராசங்கிகா, தஸ்யா ஆகிய அழகிகள் பங்கெடுத்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் 100,000 தொடக்கம் 150,000 ரூபாய்களை தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு தேவையான அரசியல் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நிறுவனங்கள் இவ்வாறான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.