
கடைக்குச் செல்வதாக தமது மகன் கூறிச் சென்றதாகவும் சிறிது நேரத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தமக்கு கூறியதனை அடுத்து அங்கு சென்ற போது அருள்தாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி காயம் அடைந்த நிலையில் வீதியில் விழுந்து கிடந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்த இளைஞரும் படைச் சிப்பாயும் துப்பாக்கியைப் பிடித்தவாறு இழுபறியில் இருந்ததாக அதனைப் பாரத்த சிலர் கூறியுள்ளதாக தெரியவருகிறது. எனினும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பதனை உடனடியாக அறிய முடியவில்லை.
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எழுதியபின் பரீட்சை முடிவுகளுக்காக பார்த்திருந்த 17 வயதுடைய மாணவரே அருள்தாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.