
நேற்று அழிவை சந்தித்த இரு விமானங்களும், வன்னியில் நடைபெற்றபேரில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளை அழிப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டதாக சிறீலங்கா வன்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் கொல்லப்பட்ட விமானி பிளைட் லெப்டினன்ட் எம் பெரேரா (28) அவிசாவளையை சேர்ந்தவர். அவர் 2004 ஆம் ஆண்டு சிறீலங்கா வான்படையில் விமானியாக இணைந்திருந்தார்.
இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் விமானங்கள் சாம் -7 மற்றும் சாம்-14 இக்லா வகையான இலகுவில் தோளில் காவிச்செல்லப்படும் சிறிய ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் தாக்குதல்களில் இருந்து தப்பக்கூடியவை.
வன்னியில் நடைபெற்ற போர்களில் மூன்றாவது மற்றும் நான்காவது ஈழப்போர்களில் விடுதலைப்புலிகளின் ராதா வான்காப்பு படையணி மேற்கொண்ட சாம்-14 ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து இரு தடவைகள் கிபீர் ரக விமானங்கள் தப்பியிருந்ததாக ஈழம் ஈ நியூஸ் இற்கு கருத்து வழங்கிய படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தாழ்வாக பறந்த கிபீர் விமானம் ஒன்று நான்காவது ஈழப்போரில் வான்காப்பு படையினரின் விமான எதிர்ப்பு பீரங்கி தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்திருந்தது. அதில் இருந்து வீழந்த பாகங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வீழ்ந்திருந்தன.
மேலும்; கட்டுநாயக்கா வான்படை தளம் மீதான தாக்குதலின் போது கிபீர் விமானங்கள் சேதமாக்கப்பட்டதுடன், இதற்கு முன்னரும் இரு கிபீர் விமானங்கள் வீழ்ந்து நொருங்கியிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.