
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
குறித்த மாணவி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் வகுப்புக்குச் சென்று இரவு 7 மணியளவில் தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம் மறைந்திருந்த மூன்று சந்தேக நபர்கள் மாணவியுடன் தகாதமுறையில் சேஷ்ட்டையில் ஈடுபட்டதுடன் அச்சுறுத்தியுமுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தையார் நெல்லியடிப் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து மூன்று சந்தேக நபர்களை நெல்லியடி பொலிஸார் கைது செய்து இன்றைய தினம் காலை பருத்தித்துறை நீதவான் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன் நிலையில் சற்று முன்னர் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.