
வன்னியில் இடம்பெற்ற போரில் பங்குபற்றிய 51, 53, 55, 57, 58 மற்றும் 59 ஆகிய படையணிகளிடம் இருந்தும், சிறப்பு படையணி மற்றும் கொமோண்டோ படையணிகளிடம் இருந்தும் வாக்குமூலங்களை பெற்று ஒரு அறிக்கையை தயாரிப்பதற்கான குழு ஒன்றை சிறீலங்கா இராணுவத்தளபதி லெப் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியா அமைத்துள்ளார்.
இந்த அறிக்கையின் மூலம் சிறீலங்கா இராணுவம் தனக்கு வெள்ளையடிக்க முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஐ.நா அறிக்கைக்கு எதிராக சிறீலங்கா அரசு தனது முழு வழங்களையும் பயன்படுத்தி வருவது தமிழ் மக்களுக்கு மிகவும் கடுமையான நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.