
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்த வேளையில், ராகுலன் 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தியாவிற்கு சென்றுள்ளார். ஆனால் குறித்த திகதியில் அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ராகுலன், திகானவிற்கு தொலைத் தொடர்பினை ஏற்படுத்தி தனது பெற்றோர் மற்றுமொரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதையறிந்த திகான தனது குழந்தைகளுடன் உடனடியாக சென்னைக்கு விஜயம் மேற்கொண்டார். ஆனாலும் ராகுலனது பெற்றோர் ராகுலனை பார்ப்பதற்கு வாயப்பளிக்கவில்லை. இந்நிலையில் தனது கணவனை தனது மாமனார் மற்றும் மாமியார் அடைத்து வைத்து கட்டாய திருமணத்துக்கு ஏற்பாடு செய்து வருவதாக திகான சென்னை நகர பொலிஸ் உயரதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இம் முறைப்பாட்டை கவனத்தில் கொள்ளுமாறு சென்னை நகர பொலிஸ் உயரதிகாரி ரீ.ராஜேந்திரன், வடபழனி உதவி பொலிஸ் அத்தியேட்சகருக்கு பணித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.