
நோர்வே அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி இந்த உதவியைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் 'புலிகளின் குரல்' வானொலிக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த முனைப்புக்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, நோர்வே தூதரகத்திடம் இந்த உதவியைக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும், நோர்வே அரசாங்கமும் அதிகளவில் புலிகளுக்கு சலுகை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், நோர்வே அரசாங்கம் நேரடியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வானொலி உபகரணங்களை வழங்கவில்லை எனவும், இலங்கை சமாதான செயலகத்தின் ஊடாக இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் உதவியுடன் வானொலி உபகரணங்கள் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.