
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி புலோலி மேற்குப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த யுவதிக்கு தொடர்ச்சியாக ஆபாச எஸ்.எம்.எஸ்களை குறித்த வாலிபர் அனுப்பியுள்ளார்.
இதனை அறிந்த குறித்த யுவதியின் சகோதரர்கள் குறித்த தொலைபேசி இலக்கம் வைத்திருக்கும் இளைஞரை மடக்கி பிடித்து தாக்க முற்பட்ட போது அவர் அவர்களிடமிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.
ஆயினும் அவர்கள் குறித்த இளைஞரை மடக்கிப் பிடித்து அவரது கைகளை வெட்ட முயற்சித்துள்ளனர். இதன்போது அவர் தப்பியோட அவரை கலைத்து கலைத்து வாளால் வெட்டியுள்ளனர் இதன்போது கைகளில் படுகாயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் சிகிச்சைகளுக்காக பருத்திததுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதில் அதே இடத்தைச்சேர்ந்த வி.மயூரன் வயது 20 என்றவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் தொடர்ச்சியாக வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருபவராவார்.
இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.