
இந்த நிபுணர்கள் குழுவின் சேவைக்காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை அடுத்த மாத இறுதியளவில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும், என்ன காரணத்திற்காக காலம் நீடிக்கப்பட்டதென்பது அறிவிக்கப்படவில்லை. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மார்சூகீ தாரூஸ்மானின் தலைமையில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிபுணர்கள் குழுவின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நிபுணர்களின் விசாரணைகள் அவசியமற்றவை என இலங்கை அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.