
தீக்கரையாக்கப்பட்ட லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகத்தை இன்று பார்வையிட்ட போதே ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தமையால் இந்த இணையத்தளம் தாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் குறித்து நடத்தும் விசாரணைகளில் நம்பிக்கை கொள்ள முடியாது. இந்த சம்பவம் குறித்து நடத்தும் விசாரணைகள் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை போல் வெறும் புஷ்வாணமான விசாரணையாக இருக்கும் எவ்வாறாயினும் மக்களின் உரிமைகளை மக்களால் மாத்திரமே பாதுகாத்துக்கொள்ள முடியும் இதனால் கொழும்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்படவுள்ள, சர்வாதிகார வெறிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பெருமளவில் வந்து கலந்துக்கொள்ள வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.