
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
31 ஜூலை 2020
வளங்களை சூறையாடுபவர்களை அகற்றவேண்டும்-புளியங்கூடலில் மணிவண்ணன்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்பில் கஜேந்திரன்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஏன் தெரிவு செய்யவேண்டும்?புலம்பெயர்ந்த மக்கள் என்பது மாபெரும் சக்தி. எமது தேசத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபா உதவிகளை செய்துவருகின்றார்கள். ஆனால் அந்த திட்டங்களை ஒருங்கிணைக்க கூடிய அவர்களது வளங்களை பயன்படுத்தக்கூடிய விரிவுபடுத்தப்பட்ட திட்டங்களோ நிறுவன கட்டமைப்போ ஏற்படுத்தப்படவில்லை. இதனை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக கட்சி சார்பற்ற பொதுவேலைக்கான கட்டமைப்பை, மாவட்ட ரீதியாக ஏற்படுத்தி, தேசிய ரீதியாக ஒருங்கிணைக்ககூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவோம்.
முஸ்லிம்கள்:மொழியால் ஒன்றித்த தனித்துவமான தேசிய இனம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக - தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் என்ற வகையில் நட்புறவான கலந்துரையாடல்களை ஆரம்பித்து உறவுநிலையை பலப்படுத்துவோம்.
மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் செயற்படும்போதே, உள்ளக கட்டமைப்புகளையும் வெளியக கட்டமைப்புகளையும் விரிவுபடுத்தி, தமிழ்த் தேசத்திற்கான அரசியல் இயக்கமாக மக்களுக்கான பலவேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும். சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தொடர்புகளை பேணி, எமது மக்களுக்கான நீதிக்கான கோரிக்கைகளை, அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய விடயங்களை தேவைகளை அவர்களுக்கு முன்வைக்கமுடியும். சர்வதேச நாடுகளுடன் தமிழர்களது தேவைகள் நலன்கள் தொடர்பாக பேசி தீர்வு காண்பதற்கு முயல்வோம். மாறாக அவர்களின் முகவர்களாக செயற்படமாட்டோம்.
நன்றி:முகநூல் செ.கஜேந்திரன்
30 ஜூலை 2020
29 ஜூலை 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஐந்து பொது அமைப்புக்கள் கூட்டாக ஆதரவு தெரிவிப்பு!

கிழக்கில் மக்கள் முன்னணிக்கு ஆயுததாரிகள் அச்சுறுத்தல்!
கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி வேட்பாளருக்கு ஆயுதமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகவேண்டும் என ஆயுதமேந்திய நபர்கள் எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது. குறிப்பிட்ட வேட்பாளரின் தந்தையை ஆயுதமுனையில் அச்சுறுத்தியுள்ள நபர்கள், மகனை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகச் சொல்லுங்கள் விலகாவிட்டால் கடத்துவோம் என எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
25 ஜூலை 2020
என்னுடன் விவாதிக்க தகுதியற்றவர் சுமந்திரன்!
.jpg)
24 ஜூலை 2020
மக்கள் முன்னணி அலுவலகத்திற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த அங்கயனின் அடியாட்கள்!

நன்றி:தாரகம்
21 ஜூலை 2020
சுமந்திரனின் பெயரை உச்சரிக்கும் தேவை இனி இருக்காது!

17 ஜூலை 2020
என் வெற்றியை விட சம்பந்தன்,சுமந்திரன் தோல்வி செய்தியே எனக்கு மகிழ்ச்சி என்கிறார் சிவாஜி!

15 ஜூலை 2020
வேலணையில் தேர்தல் பரப்புரையின்போது மோதல்!
வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்களாவடி பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர்.
அதன்போது இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளைத் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடும் வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. இதன் போது கோபமடைந்த குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த இளைஞன் வேலணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
14 ஜூலை 2020
ஊர்காவற்றுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் திடீர் மரணம்!

12 ஜூலை 2020
புளியங்கூடல் சக்களாப்பதி அருள்மிகு கதிர்காமக் கந்தன்!

(ஆலய நிர்வாகத்தினர்)
செய்தி அனுப்பிய அன்பருக்கு நன்றி!
07 ஜூலை 2020
தீர்வு கிடைக்காமல் போனமைக்கு தமிழ் தலைமைகளே காரணம்!

05 ஜூலை 2020
மக்கள் முன்னணி அலுவலத்தில் படைதரப்பு தேடுதல்!
.jpg)
03 ஜூலை 2020
சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம்!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)