தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம்
மௌனிக்கப்பட்டதின் பின் சிங்கள இனவெறி அரசும் அதன் துணைக்குழுக்களும்
முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை
முடக்குவதற்கு மேற்கொள்ளும் பரப்புரையின் காரணமாக புலம்பெயர் மக்களின் விருப்பு
மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள்
ஒரு தனித்துவமான இனம் அதன் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு,
விடுதலை வேண்டும் என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை
நிரூபிக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி
உள்ளார்கள் .
அத்தோடு புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை
தாயக உறவுகளிடம் இருந்து தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும்
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை
யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.