சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசரஅவசரமாக சாத்தப்பட்டது.காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு கோவில் நடைசாத்தப்பட்டது.வழக்கமாக 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இன்று ஜெயேந்திரர் மரணத்தை முன்னிட்டு கோவில் நடை முன்கூட்டியே சாத்தப்பட்டுள்ளது.அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
28 பிப்ரவரி 2018
ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்!
சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசரஅவசரமாக சாத்தப்பட்டது.காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு கோவில் நடைசாத்தப்பட்டது.வழக்கமாக 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இன்று ஜெயேந்திரர் மரணத்தை முன்னிட்டு கோவில் நடை முன்கூட்டியே சாத்தப்பட்டுள்ளது.அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.26 பிப்ரவரி 2018
தமிழரசுக் கட்சியில் இருந்து அனந்தி,சிவகரன் நீக்கம்!
வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவது என்று அந்தக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று முந்தினம் நடைபெற்றது. ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் அதில் முன்மொழியப்பட்டுள்ளது.சிவகரனை மாத்திரம் இப்போது நீக்கலாம். அனந்தி சசிதரன் பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை அப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாயின் இருவருக்கும் எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இறுதியில் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவது என்று ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானம் எடுத்த பின்னர் அதனை மீறி இவர்கள் இருவரும் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டே ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
25 பிப்ரவரி 2018
சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக தமிழ் மக்கள் போராட்டம்!
22 பிப்ரவரி 2018
புகலிடம் கோரியவரை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!
இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார். 2009 யில் ஏற்பட்ட புலிகளின் வீழ்ச்சி அவரின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.இலங்கை ராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு 2015 யில் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழலில், அச்சுறுத்தல் என அஞ்சிய இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்.முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு அவர் நாடுகடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய ஆஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும் கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட 18 பிப்ரவரி 2018
அமைச்சுப் பதவி புரளி என்கிறார் டக்ளஸ்!
மீன்பிடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளேன் என வரும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணையாமல் தொடர்ந்தும் வெளியில் இருந்து தனித்துவத்தை பேணுவதற்கே திடம்கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் அண்மைய நாட்களில் பல புரளிகள் கிளப்பப்படுவதாகவும் கூறினார்.இதேவேளை யாழ். மாநகரசபையில் ஆட்சியமைத்தல், ஏனைய உள்ளூராட்சி சபைகளின் தொங்கு சபைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டக்ளஸ்தேவானந்தா பல சபைகளில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களின் அடிப்படையில் மக்களின் நலன் அடிப்படையில வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என தான் கூறியதாக தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்தமை கூட்டமைப்புடன் இணைவது அல்லது கூட்டமைப்பை ஆதரிப்பது என்ற பொருள்படாது எனக் கூறிய அவர், மக்களின் நலன் அடிப்படையில் சபைகளின் இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காமை என்ற முனைப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
எனினும் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் மாநகரசபையில் ஆட்சியுரிமை கோரவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து கட்சியினுள் விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார். குறிப்பாக கூட்டமைப்பினர் ஆனோல்டை மேயராக்க முனைவதனை தமது கட்சியின் உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை என்ற நிலையில் தமது உறுப்பினர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிப்பதா? அல்லது கட்சி எடுக்கும் தீரமானத்திற்கு கட்டுப்படுவதா என்ற முடிவுக்கு வரவில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றில் தடுக்கி விழுந்தார் மகிந்த!
16 பிப்ரவரி 2018
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விடுத்துள்ள ஊடக அறிக்கை!
16-02-2018
ஊடக அறிக்கை
நன்றி நவிலல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய மக்களுக்கு எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது கொள்கையை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்.
அழுத்தங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிக்கொணர முயற்சித்த ஊடகவியலாளர்களுக்கு எமது பாராட்டுதல்களும் நன்றிகளும். நெருக்கடிக்குள் இருந்த எமக்கு நேசக்கரம் நீட்டிய எம் புலம் பெயர் உறவுகளுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
தாயக மக்களுக்கு!
எமக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் தாண்டி எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த எம் அன்பிற்குரிய மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் நம்பிக்கைக்கு அமைய நாம் உங்களுக்காய் தொடர்ந்தும் பணியாற்றுவோம். நாம் பெற்றிருக்கும் வெற்றியென்பது தனித்து ஒரு கட்சியின் வெற்றியல்ல. மாறாக, தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்திய கொள்கைக்காக எமது மக்கள் வழங்கிய அங்கீகாரமும் வெற்றியுமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீண்ட கடினமான பணிகளும் சவால்களும் எமக்குக் காத்திருக்கிறது. தொடர்ச்சியான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பாரபட்சங்களுக்கும் எதிர்நீச்சல் போட்டவாறே எமது கட்சியின் தோற்றமும் செயற்பாடும் இருந்தது, இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் தேசத்தின் பெரும்பாலான மக்களை நேரடியாக சந்தித்து, உண்மை நிலைமைகளை எடுத்து விளக்கி, தமிழர் தேசத்தின் நலனை எவ்வாறு முன்னெடுத்துச் சென்று நிலைநிறுத்துவது என்பது தொடர்பாக எடுத்துக் கூறமுடியாமல் போனமை எமது ஆழமான கரிசனைக்குரிய விடயம். ஆயினும், இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக எங்கள் உறவுகளின் வாசல் தேடி எதிர்காலத்தில் வருவோம். இலட்சியத்தில் உறுதிபூண்டு கொள்கையால் ஒன்றுபட்ட மக்களாலேயே தேசநலனை முன்னிறுத்தி செயற்பட முடியும். இதற்கு எமது மக்களின் ஆதரவு இன்றியமையாதது. பூகோள அரசியலால் நாம் சந்தித்த சவால்களையும், எமக்கிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் நாம் தெளிவாக எமது மக்களுக்கு எடுத்து விளக்கும் போது, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களிக்காத எமது மக்கள்கூட, இனிவரும் காலத்தில் எமது கொள்கையை பலப்படுத்துவதற்கு அங்கீகாரமும் ஆதரவும் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதற்கு நாம் இன்று அடைந்துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனையோர் சொல்வதை செய்வதற்கும், தருவதைப் பெறுவதற்கும் நாம் ஒன்றும் அடிமைப்பட்ட இனமல்ல. எமது பேரம் பேசும் பலத்தை சரணாகதி அரசியலூடகவோ, இணக்க அரசியலுடாகவோ அதிகரிக்க முடியாது. ஆகவே, எமது தேசநலனை முதன்மைப்படுத்திய உறுதியான கொள்கையை எடுத்துள்ள நாம், அதனை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் உங்களோடு மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு தமது சுயநலத்திற்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இதேவேளை, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதற்காக, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுடைய அனைத்து சக்திகளையும் கட்சி பேதங்கள் அமைப்புப் பேதங்களைக் கடந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
புலம்பெயர்ந்த உறவுகளிற்கு!
தாயகத்தில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை சிதைப்பதற்காய், பிளவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கு பல்வேறு சக்திகள் பல சதித் திட்டங்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டு வந்தனர், வருகின்றனர். தமிழர் தேசத்தை அழிப்பதை நோக்காக கொண்ட செயற்த்திட்டத்தின் ஒரு அங்கமே இந்தச் சதியும். ஆயினும், அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குவது போல், தமிழ்த் தேசிய பேரவையின் வெற்றிக்காய் புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். இது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர் தேசத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகள் மீது கொண்டுள்ள பற்றுறுதியை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் உறவுகளுக்கு எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்பதோடு, நாம் எமது தேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான பயணப் பாதையில் நெருப்பாறுகளையும் நீந்திக் கடக்கவேண்டியுள்ளதால், உங்களது ஆதரவை மென்மேலும் வழங்க வேண்டுமென்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
ஊடக அறிக்கை
நன்றி நவிலல்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய மக்களுக்கு எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
எமது கொள்கையை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்.அழுத்தங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிக்கொணர முயற்சித்த ஊடகவியலாளர்களுக்கு எமது பாராட்டுதல்களும் நன்றிகளும். நெருக்கடிக்குள் இருந்த எமக்கு நேசக்கரம் நீட்டிய எம் புலம் பெயர் உறவுகளுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
தாயக மக்களுக்கு!
எமக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் தாண்டி எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த எம் அன்பிற்குரிய மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.
உங்கள் நம்பிக்கைக்கு அமைய நாம் உங்களுக்காய் தொடர்ந்தும் பணியாற்றுவோம். நாம் பெற்றிருக்கும் வெற்றியென்பது தனித்து ஒரு கட்சியின் வெற்றியல்ல. மாறாக, தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்திய கொள்கைக்காக எமது மக்கள் வழங்கிய அங்கீகாரமும் வெற்றியுமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீண்ட கடினமான பணிகளும் சவால்களும் எமக்குக் காத்திருக்கிறது. தொடர்ச்சியான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பாரபட்சங்களுக்கும் எதிர்நீச்சல் போட்டவாறே எமது கட்சியின் தோற்றமும் செயற்பாடும் இருந்தது, இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் தேசத்தின் பெரும்பாலான மக்களை நேரடியாக சந்தித்து, உண்மை நிலைமைகளை எடுத்து விளக்கி, தமிழர் தேசத்தின் நலனை எவ்வாறு முன்னெடுத்துச் சென்று நிலைநிறுத்துவது என்பது தொடர்பாக எடுத்துக் கூறமுடியாமல் போனமை எமது ஆழமான கரிசனைக்குரிய விடயம். ஆயினும், இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக எங்கள் உறவுகளின் வாசல் தேடி எதிர்காலத்தில் வருவோம். இலட்சியத்தில் உறுதிபூண்டு கொள்கையால் ஒன்றுபட்ட மக்களாலேயே தேசநலனை முன்னிறுத்தி செயற்பட முடியும். இதற்கு எமது மக்களின் ஆதரவு இன்றியமையாதது. பூகோள அரசியலால் நாம் சந்தித்த சவால்களையும், எமக்கிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் நாம் தெளிவாக எமது மக்களுக்கு எடுத்து விளக்கும் போது, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களிக்காத எமது மக்கள்கூட, இனிவரும் காலத்தில் எமது கொள்கையை பலப்படுத்துவதற்கு அங்கீகாரமும் ஆதரவும் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதற்கு நாம் இன்று அடைந்துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனையோர் சொல்வதை செய்வதற்கும், தருவதைப் பெறுவதற்கும் நாம் ஒன்றும் அடிமைப்பட்ட இனமல்ல. எமது பேரம் பேசும் பலத்தை சரணாகதி அரசியலூடகவோ, இணக்க அரசியலுடாகவோ அதிகரிக்க முடியாது. ஆகவே, எமது தேசநலனை முதன்மைப்படுத்திய உறுதியான கொள்கையை எடுத்துள்ள நாம், அதனை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் உங்களோடு மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு தமது சுயநலத்திற்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இதேவேளை, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதற்காக, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுடைய அனைத்து சக்திகளையும் கட்சி பேதங்கள் அமைப்புப் பேதங்களைக் கடந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.
புலம்பெயர்ந்த உறவுகளிற்கு!
தாயகத்தில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை சிதைப்பதற்காய், பிளவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கு பல்வேறு சக்திகள் பல சதித் திட்டங்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டு வந்தனர், வருகின்றனர். தமிழர் தேசத்தை அழிப்பதை நோக்காக கொண்ட செயற்த்திட்டத்தின் ஒரு அங்கமே இந்தச் சதியும். ஆயினும், அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குவது போல், தமிழ்த் தேசிய பேரவையின் வெற்றிக்காய் புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். இது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர் தேசத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகள் மீது கொண்டுள்ள பற்றுறுதியை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் உறவுகளுக்கு எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்பதோடு, நாம் எமது தேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான பயணப் பாதையில் நெருப்பாறுகளையும் நீந்திக் கடக்கவேண்டியுள்ளதால், உங்களது ஆதரவை மென்மேலும் வழங்க வேண்டுமென்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
14 பிப்ரவரி 2018
மக்களுடன் மாத்திரமே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டு-காண்டீபன்!
வடக்கு முதல்வருடன் முன்னணியினர் சந்திப்பு!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் உடன் பங்கேற்றிருந்தனர்.மரியாதையின் நிமிர்த்தம் குறித்த சந்திப்பு நிகழ்ந்ததாக இரு தரப்புத் தகவல்களும் தெரிவித்துள்ள போதும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று கட்சிகள் ஆட்சியமைப்பத்தில் இக்கட்டான தொங்கு நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் குறித்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் மிக்க சந்திப்பாகப் பார்க்கப்படுகின்றது.12 பிப்ரவரி 2018
முன்னணியின் எழுச்சியையும் கூட்டமைப்பின் வீழ்ச்சியையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% வீதத்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%வீதத்தினையும் பெற்றது. வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 64580 வாக்குகளையும் பெற்றுள்ளன.81 ஆசனங்களை பெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3ஆவது இடத்தை தக்கவைத்தது. நான்காவது இடத்தை 32 ஆசனங்களைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், 25 ஆசனங்களை பெற்ற ஐக்கியதேசியக்கட்சி 5ஆவது இடத்தையும், 21 ஆசனங்களை பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 6வது இடத்தையும் பெற்றன.
மாவட்ட ரீதியாக தனித்து ஒரு கட்சி பெற்ற அதி கூடிய 150 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றாலும், அதற்கு எதிராக இறங்கிய ஏனைய கட்சிகள் சுயேட்சைகள் 266 ஆசனங்களைப் பெற்றுள்ளன.
இந்த வகையில் யுத்தத்தின் பின்னரான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போன்று இதுவரை சவால்களை எதிர்கொள்ளவில்லை. உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த்தேசிய முன்னணியின் எழுச்சியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவாகவும் அமைந்துள்ளது.
ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கும் வரையும், பிரதான தேசியக் கட்சிகள் இரண்டும் யாழ் மாவட்டத்தில் தனித்து நிலைகொள்ள முடியாத நிலை நிலவியது. அதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றார். இருந்த போதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் முறையே 32 – 25 என்ற வகையில் 57 ஆசனங்களை பெற்றுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 81 ஆசனங்களை பெற்று தன்னை மீள் நிர்மானம் செய்திருக்கிறது. 2 தசாப்தங்களாக ஆளும் அரசுகளோடு ஆட்சியில் பங்கெடுத்து தமிழ் தேசியத் தரப்புகளால் துரோகப் பட்டியலில் இணைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகளில் இருந்து வெளிவந்து, தமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபித்து அதன் பின்னரான 3 வருட காலப்பகுதியில் மக்களின் ஊடான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார்.
மறுபக்கம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் அணி பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 21 ஆசனங்களையே பெற்றிருக்கிறது. வடமாகாண அமைச்சர் ஒருவரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரனின் தமிழ்த் தேசியப் பிடிப்பிற்கும், அரசியல் தொடர்ச்சிக்கும் இந்த ஆசன எண்ணிக்கை மிகக் குறைவானதே.
இந்தக் கட்சிகளைத் தாண்டி சுயேட்சைகள் தமது தனிப்பட்ட ஆளுமைகளை பிரபல்யத்தை முன்னிறுத்தி 23 ஆசனங்களை பெற்றிருக்கிறார்கள்.10 பிப்ரவரி 2018
கொள்கை வென்றது!புளியங்கூடலில் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றி!
இன்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உந்து உருளி(சைக்கிள்)சின்னத்தில் போட்டியிட்ட கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றியீட்டியுள்ளார்.அவரது வெற்றிக்காக பாடுபட்ட அனைவரும் பெரும் மகிழ்வில் திளைத்துள்ளனர்.புளியங்கூடல் மண் விழாக்கோலம் பூண்டுள்ளது,வெடிச்சத்தங்கள் முழங்க இளைஞர்கள் பவனி வந்துகொண்டு இருக்கின்றார்கள்.ஞானேஸ்வரனின் வெற்றியானது அவரதும் அவர் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸினதும் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.சமூக சேவையாளரான ஞானேஸ்வரன் தான் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் தனது கடமையை சரிவர ஆற்றுவார் என்ற நம்பிக்கை அவரது தொகுதி மக்களிடையே மிகுந்து காணப்படுகின்றது.பண பலம் இல்லை கொள்கையே முக்கியம் தன்மானமே முக்கியம் என்பதை புளியங்கூடல் மக்கள் தமது வாக்குகளால் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.இந்த தருணத்தில் புளியங்கூடல் மக்களுக்கு புளியங்கூடல்.கொம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.அங்கிருந்து உடனுக்குடன் செய்திகளை வழங்கிய செய்தியாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தனிப்பட்ட ரீதியில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டவர்களுக்கும் நன்றிகள்.உந்து ஊர்தியில்(சைக்கிள்)கேட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.உரிமைக்கான போராட்டம் தொடரும் மக்கள் சக்தியோடு.09 பிப்ரவரி 2018
சுவிசில் இலங்கை இளைஞர் அடித்துக் கொலை!
07 பிப்ரவரி 2018
இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுக்கு வருகின்றன!
உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே அன்றையதினம் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல் பிரசாரங்களுக்கான, சிறுசிறு கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆதரவு திரட்டும் வீட்டுத் தரிசனம், ஒலிபெருக்கி உள்ளிட்ட சாதனங்கள் மூலமான பிரசாரம் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார்.
இம்முறை வாக்களிப்புகள், 13, 400 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறப் போகின்றன. இத்தேர்தலின் ஊடாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்காக, இம்முறை மொத்தமாக 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். பதிவு செய்யப்பட்டவற்றில் 43 அரசியல் கட்சிகளும், 272 சுயேச்சைக் குழுக்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கலாக 57,252 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 2017ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 15,760,867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.04 பிப்ரவரி 2018
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!
02 பிப்ரவரி 2018
பிடல் காஷ்ரோவின் மகன் தற்கொலை!
01 பிப்ரவரி 2018
'ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு'அடித்து சொல்கிறார் ரணில்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)