
விக்னேஸ்வரன் ஜயாவுக்கு கோவில் வாசலும் ,நீதிமன்ற வாசலும் தான் தொியும் வேறொன்றும் தொியாது என்று நாம் தமிழா் கட்சியின் தலைவா் சீமான் தொிவித்தாா். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே சீமான் மேற்கண்டவாறு தொிவித்தாா்.
அவா் அந்த நோ்காணலில் மேலும் தொிவித்ததாவது.
ஐயா விக்னேஸ்வரன் யார்? இவ்வளவு காலமும் அவர் எங்கிருந்தார்? ஈழப் போராட்டம் எத்தனை காலமாக இடம்பெற்று வருகின்றது என ஐயா விக்னேஸ்வரனுக்குத் தெரியுமா?
விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு வந்திருந்த போது இந்திய மக்கள் செய்யும் நடவடிக்கைகள் காரணமாக தங்களுக்கு நெருக்கடி வந்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கருத்து வேதனை அளிக்கின்றது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 60 வருடங்களாகப் போராட்டம் நடந்து வருகின்றது. இதில் எதிலாவது இவருக்குப் பங்கு உண்டா? உதாரணமாக சொல்லப் போனால் அரசியல் போராட்டமாக இருக்கட்டும் , ஆயுதப் போராட்டமாக இருக்கட்டும். அப்போது எங்கே போய் இருந்தார் .
இறுதிக் கட்டப் போரில் கூட எந்தவிதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு இவா் செய்யவில்லை. ஒரு கடிதம் கூட வெளிநாடுகளுக்கு இவர் எழுதவில்லை. இவருக்கு எப்படித் தெரியும் போராட்டம் என்றால் என்ன என்று?ஐயாவிற்குத் தெரிந்தது கோவில் வாசலும், நீதிமன்ற வாசலும்தான் வேறு ஒன்றும் இவருக்குத் தெரியாது.
இதில் உண்மை என்னவென்றால் இலங்கையில் தனது மண்ணுக்காகப் போராடிய போராளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கொடுத்தது, ஐயா மட்டும் தான் அது போன்று அதிகப் பேரை சிறையில் தள்ளியதும் ஐயா தான் என அவா் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.