
தமிழர்களுக்கு எதையும் இலங்கை அரசு கொடுக்காது என்பது நன்றாக தெரியும் என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு யோசப் தெரிவித்தார். வவுனியா நகர மண்டபத்தில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தில் 14 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவத்த அவர். தமிழ் மக்களுக்காக பணியாற்றிய குமார் பென்னம்பலம் அவர்கள், பால் பொங்கி வரும் போது பானை உடைந்தது போல் அவர் தனது பணியை ஆர்வத்துடன் செய்யவேண்டிய நேரத்தில் எங்களை விட்டு பிரிந்துள்ளார். எனினும் அவர் ஆற்றிய தொண்டுகளும் அவருடைய சிந்தனைப் போக்குகளும் எம்மை உற்;சாகப்படுத்தி தமிழர்களுக்கான அரசியல் உரிமைக்காக பாடுபடுமாறு தூண்டிவிட்டுள்ளது. இவரது தந்தையாரும் சிறந்த அரசியல்வாதியாக சட்டமேதையாக இருந்தவர். தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழ்ந்த இனம். ஐம்பதுக்கு ஐம்பது என்ற உரிமை பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமைத்தாகம் எல்லோருக்கும் உள்ளதைப் போலவே தமிழ் மக்களுக்கும் உள்ளது. தமிழ் இனம் ஓர் தேசியம் அந்த உரிமையில் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அவர்கள் தம்மை ஆள்வதற்கான கோரிக்கையை வைப்பதற்கான உரிமை இருக்கின்றது என்பதனை முன்வைத்து செயற்பட்டவர். அந்தவகையிலேயே ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மகனான குமார் பொன்னம்பலம் அவர்கள் விட்டுச்சென்ற பணியை நாம் தொடரவேண்டும். அதாவது தமிழ் மக்களினுடைய விடுதலையிலும் அரசியல் உரிமையிலும் அடித்தளம் கொண்டதாக அவர்கள் தங்களையே ஆட்சி செய்து முன்னேற்றம் காணும் வகையிலாக தமிழர்களின் உரிமை அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதிலே நாமும் பாடுபடவேண்டும்.குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு நன்றாக தெரியும் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதையும் கொடுக்காது என்று. ஏனெனில் இந்த நாட்டில் தேச பிதா என்று சொல்லக்கூடிய உயர்ந்த தளத்திற்கு ஏறி வந்தவர் கிடையாது. அரசியல்வாதிகள் எல்லாம் தங்களுடைய கட்சி அரசியலுக்கும் தங்களுடைய அதிகாரத்தை பெற்றுக் கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக உள்ளார்கள். முழு தேசத்தையும் எடுத்து பார்த்தால் அல்லது அரசியல் ஜதார்த்தத்தை எடுத்துப் பார்த்தால் எங்களுடைய நாட்டின் பல மொழிகளையும் கலாசாரத்தையும் கொண்டவர்களுக்கு மத்தியில் சுயநிர்ணய உரிமைக்கு நாம் தகைமை கொண்டவர்கள் என்பதை இவ்வாறான நினைவு நாளில் எடுத்து சொல்லியிருக்கின்றார். அதன் அடிப்டையில் இந்த அரசாங்கம் எமக்கு எதனையும் செய்து விடாது. எங்காவது அதை இதை செய்து வீதி போட்டுத் தாருங்கள் உங்களுக்கு என்று கூறி ‘பிள்ளையை அழுக்குகின்ற மிட்டாய்’ மாதிரி எதையாவது எமக்கு எரிந்து விடுவார்கள். அதை எடுத்துக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என்பார்கள். எமக்கு சலுகைகளும் வேண்டாம். நீ எங்களிடம் இரங்கவும் தேவையில்லை. ஆனால் எங்களுக்கு உள்ள உரிமையை தா. உரிமையை பறித்த நீ. உரிமையை கொடு. எனக்கு உரிமை புதிதாக வரவில்லை. ஏற்கனவே வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்து வந்தோம். நம்மை நாமே ஆண்டு வந்தோம். ஆகவே புறநாட்டவாகள் வந்து எம்மை ஒன்றாக சேர்த்து அங்குமிங்குமாக கொண்டு சென்றார்கள். ஆனால் நாங்கள் எமது பிரதேசத்தில் எம்மை ஆளவேண்டும் என உரிமையை தரவேண்டும் என நாம் போராடவேண்டும். ஆனால் இந்த போராட்டத்தில் தனி நாடு என்பதனை அவர்கள் காதில் கொள்ளாவிட்டாலும் இந்த உரிமைகளையும் தரமாட்டார்கள் என்று குமார் பொன்னம்பலத்திற்கு தெரியும். தமது உள்ளத்தில் இருந்து வருவதுதான் உண்மை என்று கூறுபவர்கள் வேறு எதுவும் உண்மை என்று ஏற்றுக்கொள்வும் மாட்டார்கள் எமக்கு உரிமையையும் தரமாட்டார்கள்.ஆகவே இப்படிப்பட்ட அரசாங்கத்திலே நம்பிக்கை வைக்காது குமார் பொன்னம்பலம் சர்வதேச சமூகத்திடம் சென்று மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டார். அவ்வாறான மனிதர் எம்மை விட்டு சென்றமை பேரிழப்பாகும் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.