
ரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கருத்து வெளியிடுகையிலையே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்.. இங்கு கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரிந்துரைகள் எவையுயும் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அரசாங்கம் சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருகின்றது. இதற்கு மாறாக யுத்தம் முடிவடைந்த பின்னர் தொடர்ந்தும் காணி ஆக்கிரமிப்புக்கள் இரானுவ முகாம்களை அமைத்தல் மற்று தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஆகிய செயற்பாடுகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந் நிலையில் அடுத்தமாதம் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திலிருந்து தப்புவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதாவது யுத்த கணக்கெடுப்புக்கள் காணாமல் போனவர்கள் தொடர்பாக பொய்யான தகவல்களைத் திரட்டி ஜெனிவாவிற்கு கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கமையவே காணமல் போனவர்கள் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொய்யான தகவல் திரட்டினை மேற்கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் அரசு நியமித்துள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்குழு கூட கண்துடைப்பே.ஏற்கனவே அரசின் மனிதவுரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் மக்கள் புகார் செய்துள்ளனர்.முதலில் அதற்கு என்ன நடந்ததென்பதை இக்குழு விசாரிக்கட்டுமென்றார். தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு அரசினால் எதிராக இழைக்கப்பட்டுள்ள அல்லது இழைக்கப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கு சர்வதே விசாரணையே இங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய விசாரணையொன்றே இம்முறை ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ளதாக நம்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.