
தமிழக முன்னாள் முதலமைச்சரும் உலகத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 28வது நினைவு தினம் இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் கல்வியங்காடு சந்தை பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் என அழைக்கப்படும் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்கள் மாலை அணிவித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் ரவி ஆகியோரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில் வரத்தகர்கள்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டு எம்.ஜி இராமச்சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.