நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
30 ஜூன் 2014
தீவகம் இருளில் மூழ்கியது!
29 ஜூன் 2014
திரு,நடேசன் அவர்களின் ஆவியுடன் பேசினாராம் இந்தச்சாமி!
ஆவியோடு பேசுவதன் மூலம் பல பிரச்னைகளைத்
தீர்த்துவைப்பதாய் ரத்தினசாமி செய்த ஒரு விளம்பரத்தின் மூலம் அவரிடம் பேட்டி எடுத்தனர் இந்திய ஊடகமான விகடன் டைம்பாஸ் குழுவினர்.
”நான் ஆரம்பத்தில் லாட்டரி விற்பனையாளராக இருந்தேன். அப்போது என் தாயார் காலமாகிவிட்டார். அது பற்றிய கவலையில் இருந்தபோது, ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் புத்தகத்தைப் படித்து என் அம்மாவின் ஆவியுடன் பேச முயற்சி செய்தேன். முதல் முயற்சிலேயே வெற்றி கிடைத்தது. அதைத் தொடந்து நண்பர்கள், உறவினர்கள் ஆவியுடன் பேசத் துவங்கி, பின்னர் அதுவே முழு நேர வேலையாக மாறிவிட்டது’ என்று தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுத்தவரிடம், நாங்களும் சில ஆவிகளிடம் பேச வேண்டும் என்றோம்.
”அதற்கென்ன ஜோரா பேசிடுவோம். யாரிடம் பேச வேண்டும். உங்க பாட்டியிடமா?” என்றார்.
”விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்கிட்ட பேசணும் என்றோம். ”அவர் உயிரோடதான் இருக்கார். ஏற்கெனவே ஒருமுறை எனது வழிகாட்டும் ஆவியிடம் அவரிடம் பேச வேண்டும் என்றபோது, அவர் ஆவி உலகத்துக்கு வரவில்லை. பூமியில்தான் இருக்கிறார் என்று தகவல் வந்தது. எனவே அவரிடம் பேச முடியாது’ என்றார். ”பின்லேடன்கிட்ட பேசுறீங் களா?” என்றார். ”பேசலாமே” என்றதும் பேப்பரை எடுத்துக்கொண்டு, ”கேள்விகளைச் சொல்லுங்கள். பின்லேடனின் ஆவி எனக்குள் புகுந்து பதில்களை எழுதும்’ என்றார். நாம் கேட்ட கேள்விகளும் அவருக்குள் புகுந்து பின்லேடனின் ஆவி(!) அளித்த பதில்களும்…
”இரட்டை கோபுரத் தாக்குதலை நீங்கள்தான் நடத்தினீர்களா?‘
”நாங்கள்தான் நடத்தினோம். எங்களின் லட்சியம் அந்தத் தாக்குதலில் நிறைவேறியது.’
”உங்களின் பாகிஸ்தான் இருப்பிடத்தை அமெரிக்காவிற்குக் காட்டிக்கொடுத்தது யார்?’
”அதுதான் எனக்கும் இன்னும் புரியவில்லை. ஆனால் என் உடன் இருந்தவர்களோ, என் குடும்பத்தினரோ காட்டிக்கொடுக்கவில்லை. அது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.’ ”அடுத்து யாரிடம் பேச வேண்டும்?” என்றார். நம்முடன் வந்திருந்த நண்பரோ, ”சில்க் ஸ்மிதாவிடம் பேச வேண்டும்” என்றார். ”அந்தம்மாகிட்ட நிறைய முறை பேசியாச்சு சார். வேற யாரையாவது சொல்லுங்க” என்றார். ”விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நடேசனின் ஆவியுடன் பேச முடியுமா” என்று கேட்டோம். யோசித்தவர், ”அவரின் படம் வேண்டுமே… படம் இல்லாமல் பேச முடியாது” என்றார். கூகுளில் இருந்து டவுண்லோட் செய்து நடேசனின் படத்தைக் காட்டினோம். அதன் பின் நமது கேள்விகளுக்கு நடேசனின் ஆவியிடம் இருந்து பெற்ற பதில்கள்…
”உங்களைச் சரணடையச் சொல்லியது யார்?’
”உங்களுக்கு என் வாழ்த்துகள். போரின் இறுதிக் கணத்தில் நாங்கள் யாருடனும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தோம். ஒரே ஒருவரின் தொடர்பு மட்டும் கிடைத்தது. அவர் தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் வாரிசு. அவரின் மூலமாகப் போராளிகள் தவிர்த்து, அரசியல் பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமாவது காப்பாற்றச் சொன்னோம். அவரின் தந்தையுடன் தொடர்புகொண்டு சொல்வதாகச் சொன்னவர், பின்னர் வெள்ளைக் கொடியுடன் சரணடையுமாறு சொன்னார். அவரின் பேச்சை நம்பி வெள்ளைக் கொடியுடன் வந்த எங்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.’
”ராஜபக்ஷேவுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்?’
”ராஜபக்ஷேவை ஒரு மனிதப் பிறவியாகவே கருத முடியாது. அவர் செய்த அட்டூழியத்திற்கு, கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். மோடியிடம் அவரின் நரித்தந்திரங்கள் பலிக்காது. புலியைக் கண்ட நரிபோல், மோடி ஆட்சிக்கு வரவும் பயந்துபோய் கிடக்கிறார்.’
”பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’ ‘தேசியத் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை. அவர் இறந்திருந்தால், இங்கு வந்திருப்பார். அவர், கடற்புலி தளபதி சூசை, பொட்டம்மான் மூவரும் நாங்கள் இறப்பதற்கு முதல் நாளே தப்பிவிட்டனர்.’ பேட்டி முடித்து கிளம்பும்போது, ”ஒருநாள் ஃப்ரீயா வாங்க தம்பி. சதாம் ஹூசன், கிருபானந்த வாரியார் ஆவிகளைக் கூப்பிட்டுப் பேசுவோம்’ என்றார்.
”நான் ஆரம்பத்தில் லாட்டரி விற்பனையாளராக இருந்தேன். அப்போது என் தாயார் காலமாகிவிட்டார். அது பற்றிய கவலையில் இருந்தபோது, ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் புத்தகத்தைப் படித்து என் அம்மாவின் ஆவியுடன் பேச முயற்சி செய்தேன். முதல் முயற்சிலேயே வெற்றி கிடைத்தது. அதைத் தொடந்து நண்பர்கள், உறவினர்கள் ஆவியுடன் பேசத் துவங்கி, பின்னர் அதுவே முழு நேர வேலையாக மாறிவிட்டது’ என்று தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுத்தவரிடம், நாங்களும் சில ஆவிகளிடம் பேச வேண்டும் என்றோம்.
”அதற்கென்ன ஜோரா பேசிடுவோம். யாரிடம் பேச வேண்டும். உங்க பாட்டியிடமா?” என்றார்.
”விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்கிட்ட பேசணும் என்றோம். ”அவர் உயிரோடதான் இருக்கார். ஏற்கெனவே ஒருமுறை எனது வழிகாட்டும் ஆவியிடம் அவரிடம் பேச வேண்டும் என்றபோது, அவர் ஆவி உலகத்துக்கு வரவில்லை. பூமியில்தான் இருக்கிறார் என்று தகவல் வந்தது. எனவே அவரிடம் பேச முடியாது’ என்றார். ”பின்லேடன்கிட்ட பேசுறீங் களா?” என்றார். ”பேசலாமே” என்றதும் பேப்பரை எடுத்துக்கொண்டு, ”கேள்விகளைச் சொல்லுங்கள். பின்லேடனின் ஆவி எனக்குள் புகுந்து பதில்களை எழுதும்’ என்றார். நாம் கேட்ட கேள்விகளும் அவருக்குள் புகுந்து பின்லேடனின் ஆவி(!) அளித்த பதில்களும்…
”இரட்டை கோபுரத் தாக்குதலை நீங்கள்தான் நடத்தினீர்களா?‘
”நாங்கள்தான் நடத்தினோம். எங்களின் லட்சியம் அந்தத் தாக்குதலில் நிறைவேறியது.’
”உங்களின் பாகிஸ்தான் இருப்பிடத்தை அமெரிக்காவிற்குக் காட்டிக்கொடுத்தது யார்?’
”அதுதான் எனக்கும் இன்னும் புரியவில்லை. ஆனால் என் உடன் இருந்தவர்களோ, என் குடும்பத்தினரோ காட்டிக்கொடுக்கவில்லை. அது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.’ ”அடுத்து யாரிடம் பேச வேண்டும்?” என்றார். நம்முடன் வந்திருந்த நண்பரோ, ”சில்க் ஸ்மிதாவிடம் பேச வேண்டும்” என்றார். ”அந்தம்மாகிட்ட நிறைய முறை பேசியாச்சு சார். வேற யாரையாவது சொல்லுங்க” என்றார். ”விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நடேசனின் ஆவியுடன் பேச முடியுமா” என்று கேட்டோம். யோசித்தவர், ”அவரின் படம் வேண்டுமே… படம் இல்லாமல் பேச முடியாது” என்றார். கூகுளில் இருந்து டவுண்லோட் செய்து நடேசனின் படத்தைக் காட்டினோம். அதன் பின் நமது கேள்விகளுக்கு நடேசனின் ஆவியிடம் இருந்து பெற்ற பதில்கள்…
”உங்களைச் சரணடையச் சொல்லியது யார்?’
”உங்களுக்கு என் வாழ்த்துகள். போரின் இறுதிக் கணத்தில் நாங்கள் யாருடனும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தோம். ஒரே ஒருவரின் தொடர்பு மட்டும் கிடைத்தது. அவர் தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் வாரிசு. அவரின் மூலமாகப் போராளிகள் தவிர்த்து, அரசியல் பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமாவது காப்பாற்றச் சொன்னோம். அவரின் தந்தையுடன் தொடர்புகொண்டு சொல்வதாகச் சொன்னவர், பின்னர் வெள்ளைக் கொடியுடன் சரணடையுமாறு சொன்னார். அவரின் பேச்சை நம்பி வெள்ளைக் கொடியுடன் வந்த எங்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.’
”ராஜபக்ஷேவுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்?’
”ராஜபக்ஷேவை ஒரு மனிதப் பிறவியாகவே கருத முடியாது. அவர் செய்த அட்டூழியத்திற்கு, கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். மோடியிடம் அவரின் நரித்தந்திரங்கள் பலிக்காது. புலியைக் கண்ட நரிபோல், மோடி ஆட்சிக்கு வரவும் பயந்துபோய் கிடக்கிறார்.’
”பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’ ‘தேசியத் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை. அவர் இறந்திருந்தால், இங்கு வந்திருப்பார். அவர், கடற்புலி தளபதி சூசை, பொட்டம்மான் மூவரும் நாங்கள் இறப்பதற்கு முதல் நாளே தப்பிவிட்டனர்.’ பேட்டி முடித்து கிளம்பும்போது, ”ஒருநாள் ஃப்ரீயா வாங்க தம்பி. சதாம் ஹூசன், கிருபானந்த வாரியார் ஆவிகளைக் கூப்பிட்டுப் பேசுவோம்’ என்றார்.
ஐ.நா முன் இரு இராணுவ அதிகாரிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர்!
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அரச இரகசிய காப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை படையினருக்கு எதிராகவும் சாட்சியமளிக்க பல்வேறு தரப்பினர் தயாராகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருப்பதாக ஞாயிறு திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. சாட்சியாளர்கள் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுக்கள், தங்குமிட வசதிகள் மற்றும் விசேட கொடுப்பனவுகளை வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக் குழுவினர் ஜெனிவா உட்பட உலகின் 8 நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இதனிடையே விசாரணைக் குழுவின் முன் பொய்ச்சாட்சி வழங்கி அரசியல் புகலிடம் பெற சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் இவ்வாறு நாட்டை காட்டிக் கொடுக்க நபர்களின் சொத்துக்களை கூட அரசுடமையாக்க முடியும் எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது. இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 31 பேர் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
28 ஜூன் 2014
முக்கொலையாளியை விடுவிக்க வேண்டாம்-மன்றில் கோரிக்கை!

27 ஜூன் 2014
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேர்த்திருவிழா நாளை!
மாணவியுடன் இருந்த இளைஞனுக்கு தர்ம அடி!
மானிப்பாய்ப் பகுதியில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காயத்தைப் பார்த்த மருத்துவர் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அவதானித்து பொலிசாரிடம் தெரிவிக்க முற்பட்ட போது இளைஞர் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர்குழு ஒன்று குறித்த இளைஞனை பொலிசாரிடம் நாங்கள் அடித்ததாகத் சொல்லக்கூடாது என அவனை அச்சுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் வைத்தியர் அவர்களை விசாரித்த போதே அவர்கள் அவ் இளைஞனுக்கு ஏன் அடித்தது என வைத்தியருக்கும் அங்கு நின்றவர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அரச அலுவலகம் ஒன்றில் சிற்றூழியர் எனவும் அத்துடன் மானிப்பாய்க்கு சற்றுத் தொலைவில் உள்ள இடமொன்றில் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்று நடாத்தி வருபவர் எனவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான குறித்த நபர் தொலைத் தொடர்பு நிலையத்திற்கு றீலோட் செய்ய வரும் பெண்களின் இலக்கங்களை எடுத்து அவர்களுக்கு காதல் மொழி கதைத்து வந்த போது ஒருதடவை பெண் ஒருவரின் சகோதரனால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தனது தொலைபேசி நிலையத்தில் வேலைக்கு நின்ற யுவதியையே திருமணம் முடித்துள்ளார். அதுவும் நான்கு மாத கர்ப்பிணியாக்கி பெண்ணின் பெற்றொரும் உறவினர்களும் கொடுத்த அழுத்ததினாலேயே திருமணம் முடித்ததாகவும் அவ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த வாரம் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை ஆனைக்கோட்டையில் உள்ள அவளது தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனியே தனது வீட்டில் இருந்துள்ளார். தனது கடைக்கு வந்த நகரப்பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவிக்கு இலவசமாக றீலோட் செய்து கொடுப்பதும் தனது தரமான கைத்தொலைபேசியை மாணவிக்கு சில நாட்கள் வைத்திருக்கும் படி கொடுத்தும் மாணவியை தனது பக்கம் இழுத்து தனது வீட்டிற்கு வரச் செய்து உல்லாசமாக இருந்துள்ளார். குறித்த மாணவி தனியே இருந்த இளைஞனின் வீட்டிற்கு செல்வதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் மாணவியுடன் இளைஞர் உல்லாசமாக இருந்த போதே கையும் மெய்யுமாகப் பிடித்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
தாக்குதலில் தலையில் காயமiடைந்த இளைஞனை அவர்களே வைத்தியசாலையின் அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் அவர் பொலிசாரிடம் முறையிடாது இருக்க மீண்டும் வந்து தாம் எச்சரித்ததாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இயக்கச்சியை சேர்ந்தவர் மருத்துவமனையில் சடலமாக ஒப்படைப்பு!
மயக்கமுற்ற நிலையில் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டவேளை இடைவழியில் உயிரிழந்தார். பின்னர் இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இயக்கச்சி கோவில்வயலைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான பொன்னையா நவரத்தினம் (வயது - 56) என்பவரது சடலமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன் வேட்டைக்கு சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் இன்று முற்பகல் சங்கத்தாவயல் சுடலையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார் என்றும், வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவரது உடல் சோர்வடைந்ததால் பளை மருத்துவமனைக்கு தாம் கொண்டு சென்றனர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இடைவழியில் உயிரிழந்துவிட்டார் என்றும் உறவினர் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 ஜூன் 2014
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு முன் பயிற்சியில் ஈடுபடும் பிக்குகள்!
அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் ஆயுத பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி தெரிவித்தார்.
மேலும் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப்பட்ட இப் புகைப்படம் வெளிவந்தது தொடர்பில் பொது பலசேனா அதிர்ப்தி அடைந்துள்ளதாகவும் பாரிய இரகசியங்கள் இனி வரும் காலங்களில் வெளி வர வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி:ஜேவிபி நியூஸ்
நன்றி:ஜேவிபி நியூஸ்
தமிழர் நிலங்கள் சிங்கள மயமாக்கப்படுவதை நேரில் பாருங்கள்!
"தமிழர் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் எவ்வாறு சிங்கள மயமாக்கப்படுகின்றது என்பதை முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு சுவிற்சர்லாந்தின் தூதுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிப்ரென் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார் இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவம் இருப்பதால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இராணுவத்தினரால் பொருளாதார, சமூக விருத்திகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பவை தொடர்பிலும் முதலமைச்சரால் தூதுவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பிரதேசங்களில் 450 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பிலும் அவர்களால் இரணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
25 ஜூன் 2014
அனந்தி,கஜதீபன்,சுகிர்தன் ஆகியோரது பாதுகாப்பு வாபஸ்!
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக வடக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களது மெய்ப்பாதுகாவலர்களை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று தெரிவித்து றொஹான் டயஸ் கடிதம் ஒன்றை வடக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- தங்களது பாதுகாப்புக்காக மெய்ப் பாதுகாவல் உத்தியோகத்தர்களைப் பெற்றுத் தருவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான அமைச்சின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பதவி நிலைக்குரிய அதிகார எல்லையின் பிரகாரம் தங்களுக்கு நெருங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுத்தர போதுமான அதிகாரம் எனக்கு இல்லை. மேற்குறிப்பிடப்பட்ட அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இது சம்பந்தமாக தங்களுக்கு இடையூறுகள் ஏற்படின் அதற்காக எனது மனவருத்தத்தைத் தெரிவித்துகொள்கிறேன் - என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ச.சுகிர்தன், அனந்தி சசிதரன் ஆகியோரது பொலிஸ் பாதுகாப்பே இவ்வாறு திரும்பப்பெறப்பட்டுள்ளன. இது குறித்து தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று சுகிர்தன், கஜதீபன் ஆகியோர் உறுதிப்படுத்தினர். எனினும் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்றும்,ஆனால் விடயம் சரியானதுதான் என்றும் அனந்தி தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் இளம்குடும்பஸ்தர் குத்திக்கொலை!
கனடா மொன்றியலில் நேற்றையதினம் மாலை தமிழர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி கொலை 7745 Mountain Sights எனும் இடத்தில் அவரது வீட்டிற்கு பக்கத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. ஜெயராசன் மாணிக்கராஜா (40) எனும் இளம் குடும்பஸ்தரான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் . அவரது நண்பர்களில் ஒருவராக உள்ள அவரது ஊரை சேர்ந்த நபரே இக் கொலையை செய்ததாக காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் ஒருவரைக் கைது செய்துள்ளார்கள் . ஜெயராசன் மாணிக்கராஜா அவர்கள் மொன்றியலில் 2000 ஆம் ஆண்டு குடியேறியதிலிருந்து ஒரு சிறந்த சமூக சேவையாளராகவும் ஆலயத்தொண்டு மற்றும் விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார் என தெரிவிக்கப்படுகிறது.
24 ஜூன் 2014
சதாமுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி சுட்டுக்கொலை!
23 ஜூன் 2014
இசைப்பிரியாவின் தாயார் உலகத் தமிழர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஊடகப் போராளி இசைப்பிரியாவையும் அவர்போன்ற இசைப்பிரியாக்களையும் தத்தமது நலன்களுக்காக வியாபாரமாக்காதீர்கள் என சோபனா என்ற இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சனி குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக உருக்கமான வேண்டுகோளை உலகத் தமிழர்களை நோக்கி முன்வைத்துள்ளார்.அவரின் வேண்டுகோளை நாமும் புளியங்கூடல்.கொம் ஊடாக உலகத் தமிழர்களிடம் கொண்டு வருகின்றோம்.(நன்றி:குளோபல் தமிழ் செய்தி)
கனடாவில் ஒன்றிணைந்தனர் தமிழ் முஸ்லீம் மக்கள்!
இலங்கையில் பொது பல சேனாவினால் இஸ்லாமியத் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களும், இஸ்லாமிய தமிழ் மக்களும் இணைந்து நேற்று ஞாயிறன்று நடாத்தினர். ஸ்காபுரோ நகரின் செப்பார்ட் - மார்க்கம் சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது அதிருப்தியையும் - எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். கனடாவில் இஸ்லாமிய தமிழர்கள், ஈழத்தமிழர்களுடன் இணைந்து நடத்திய - இலங்கை அரச அடக்குமுறைக்கு எதிரான - முதல் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது என இணையங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
22 ஜூன் 2014
ஆசிரியரின் தாக்குதலில் காதுகேட்கும் தன்மையை இழந்த மாணவன்!
ஆசிரியரின் தாக்குதலினால் காதுகேட்கும் தகவினை இழந்த பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ந.கதீசன் யாழ்.போதனாவைத்திய சாலையில் கடந்த ஆறுநாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளான். 2014ம் ஆண்டு கணிதப்பிரிவில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தவறு புரிந்ததாகக்கூறி கடந்த திங்கக் கிழமை பாடசாலையில் பரீட்சை இடம்பெற்றிருந்த வேளை ஆசிரியர் ஒருவர் பரீட்சை மண்டபத்திற்குள் நுளைந்து குறித்த மாணவனை பலமாகத்தாக்கியுள்ளார்
குறித்த மாணவன் தான் புரிந்தது குற்றமெனில் பாடசாலை அதிபர் முன்னிலையில் பகிரங்க மன்னிப்புக்கோறுவதாகக் கூறியபோதும் தாக்கிய ஆசிரியர் அவ்விடத்தைவிட்டுச் சென்று பின்பு மீண்டும் வந்து அதே மாணவனை தாக்கியுள்ளார். இதன் பயனாக தற்போது குறித்தமாணவனின் ஒருபக்க காதுச்செவிப்பறை வெடித்து கேட்கும் தன்மையை இழந்துள்ளது.
தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவன் தொடர்பினில் கல்வி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லையெனத் தெரியவருகின்றது. இருப்பினும் சம்பவம் தொடர்பினில் கடந்த 20ம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் பெற்றோரினால் முறையிடப்பட்டுள்ளதோடு வைத்தியசாலைத்தரப்பினர் மாணவனின் எதிர்காலம் கருதி பொலிசாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.
21 ஜூன் 2014
சாட்டிக்கடலில் மூதாளர் பலி!
சாட்டிக் கடலில் மூழ்கி மூதாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.குடும்பத்தினருடன் சாட்டிக் கடலில் குளிக்கச் சென்ற இவர் இன்று மாலை கடலில் மூழ்கி மரணமானார். மானிப்பாய் வீதி, கொட்டடியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் நடராஜா (வயது 84) என்பவரே உயிரிழந்தவராவார். பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்,போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கோத்தபாயவை கொல்ல புலம்பெயர் புலிகள் முயற்சியாம்!
பாதாள உலகக் குழுக்ககளைக் கொண்டு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை படுகொலை செய்ய தமிழீழ விடுதபை; புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்கள் முயற்சித்து வருவதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இயங்கி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புச் செயலாளரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட திட்டம் அம்பலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் மலேஷியாவிலிருந்து இந்த கொலைத் திட்டத்தை தீட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடும்போக்குடைய அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் ஊடாக இந்த கொலை முயற்சி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வன்னி யுத்தத்தின் பொது சிங்கப்பூர் வழியாக மலேஷியா சென்றடைந்த குறித்த புலி உறுப்பினர், புலிகளின் கொழும்பு புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றிவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நபர் தற்போது ஜெர்மனிய கடவுச் சீட்டை பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோதபாய ராஜபக்ஷவின் படுகொலை முயற்சியின் பின்னணியில் சில வெளிநாட்டு புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்களும் செயற்படக் கூடுமென்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தொடர்கிறது மிருகபலி!250கடாக்கள் படுகொலை!
தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கடாக்ளும் நூற்றுக்கு மேற்பட்ட சேவல்களும் வேள்வியில் பலியிடப்பட்டன. அதிகாலையில் இடம் பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்வி இடம் பெற்றது. நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப சுகாதார முறைப்படியே கடாக்கள் சேவல்கள் வெட்டப்பட்டன என்றும், பொது மக்கள் வெட்டும் காட்சியைப் பார்வையிடா வண்ணமே பலியிடல் நடைபெற்றது என்றும் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வலி. வடக்கு தெல்லிப்பழைப் பிரதேச சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கடாக்களைப் பரிசோதனை செய்து, அவற்றை வெட்ட அனுமதித்தனர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வேள்வியில் கலந்துகொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
20 ஜூன் 2014
மாணவி மீது பாலியல் வல்லுறவு!படையினன் கைது!
மூளை வளர்ச்சி குறைந்த 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்று அதிகாலை 1.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நல்துர பிரதேசத்தில் உள்ள இராணுவ பொறியியல் படைப் பிரிவின் முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
முந்தல் பொலிஸ் பிரிவின் நவதன்குளம் – விசேனைக்கட்டு பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 அளவில் சந்தேக நபர் மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தல் – நவதன்குளம் பிரதேசத்தில் வசித்து வரும் போரில் அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக சந்தேக நபர் பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக முந்தல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
19 ஜூன் 2014
வேலணையில் கம்பத்துடன் மோதிய மாநகரசபை அதிகாரிகள்!
யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் பிரணவநாதன் அவர்களின் பிக்கப் வாகனம் வேலணை அராலிச் சந்தியில் இன்று மாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அலுவலக நேரத்தில் சாட்டிக் கடற்கரையில் மது அருந்தி விட்டு நிலை தடுமாறிய போதையில் வாகனத்தை செலுத்தியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
வேலணை அராலிச் சந்தியில் உள்ள மின் கம்பம் ஒன்றில் மோதியதில் மின்கம்பம் ஐந்தடி தூரம் வரை தூக்கி வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் முன்பக்கம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. யுன்.என்.டி.பி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட யாழ்.மாநகர சபை ஆணையாளரின் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
அத்துடன், வேலணை வங்களாவடிச் சந்தியில் பலரின் உயிரைப் பறித்தெடுக்கும் வகையில் மேற்படி வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இவ் வாகனத்தில் யாழ்.மாநரக சபையில் கடமையாற்றும் ஐந்து உத்தியோகத்தர்கள் அதிஉச்ச மதுபோதையில் இருந்துள்ளனர்.
வாகனச் சாரதி நிலை தடுமாறி வாகனம் விபத்துக்குள்ளானது கூடத் தெரியாத நிலையில் போதையில் நின்றுள்ளார்.இவ்வாறானவர்களை உடனடியாக வேலையில் இருந்து நிறுத்துவதுடன், பல மனித உயிர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
ஒரு அரச வாகனத்தில், அதுவும் ஐந்து பேரும் அரச பணியாளர்கள், அலுவலக நேரத்தில் இவ்வாறானதொரு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை யாழ்.மாநகர சபையின் நிர்வாகத் திறமையினை எடுத்தக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அத்துடன், வாகனச் சாரதி விபத்து நடந்த இடத்தில் கூடிய மக்களிடம் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டதுடன், இது எங்களது வாகனம், இதை நீங்கள் ஒன்றும் பார்க்த் தேவையில்லை என போதையில் உலறிக் கொண்டிருந்தார்.
இது இவ்வாறிருக்க வாகனத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஆணையாளரின் பெயர் பலகை வாகனத்தில் வந்த ஒருவரால் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
நன்றி:(செய்தி,படம்)new jaffna
நன்றி:(செய்தி,படம்)new jaffna
தமிழர்களுடன் ஒன்றிணைந்து போராடப்போவதாக லண்டனில் முஸ்லீம் மக்கள் தெரிவிப்பு!
18 ஜூன் 2014
மிருகபலிக்கு கூட்டமைப்பு ஆதரவா?
மிருகபலியை தடுக்க கலந்துரையாடல்!
17 ஜூன் 2014
லெப்டினன்ட் ஜுனைதீனின் வழியில் வாரீர்!
நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய்
நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து
பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது
உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
ஆனால்... ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும்,
வீரமுனையிலும் தமிழ்க் குருதி வடிந்த பொழுது...
தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது
நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை.
எரியும் வீட்டில் பற்றியெரிந்த கொள்ளிக் கட்டையைப் பிடுங்கி
வீட்டில் இருந்தவனை எரித்த கதையாக எங்களை எரித்தீர்கள்.
ஜிகாத், முஸ்லிம் ஊர்காவல்படை எனப் போர் பறையடித்து
தென்தமிழீழ மண்ணில் எங்கள் உயிர்களைக் காவு கொண்டீர்கள். கல்முனையில் பள்ளி சென்று திரும்பிய பதினான்கு வயதுத்
தமிழ்ச் சிறுமியை நிர்வாணப்படுத்தி
மாறி மாறி வன்புணர்வு செய்தீர்கள்.
பின் அந்தப் பச்சிளம் தமிழ்க் குழந்தையை கல்லால் அடித்து
இஸ்லாமிய மரபுப்படி ‘வேசியை’க் கொன்றோம் என்று எக்களாமிட்டீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
வடதமிழீழ மண்ணை சிங்களம் முற்றுகையிட்டுப் பட்டினி போட்ட பொழுது, மலக்குண்டுகளை வீசிய பொழுது,
உங்களில் அரைவாசிப் பேர் சிங்கள நாட்டிற்கு ஓடிப் போனீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
பின்னர் பேரீச்சம் பழ வாகனங்களில் யாழ்ப்பாணத்திற்கு
ஆயுதங்களைக் கொண்டு வந்து
எம்மைக் கொல்வதற்கு மறைத்து வைத்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
வேறு வழியின்றி... எங்கள் பாதுகாப்பிற்காக... உங்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களில் எஞ்சியிருந்தோரை எங்கள் புலிமறவர்கள்
புத்தளத்திற்கு அனுப்பி வைத்தார்கள் - சிங்கள நாட்டிற்கு அல்ல!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகக் கருதியதால்!
ஆனால் புத்தளம் தமிழீழத்தின் பகுதி என்பதை நீங்கள் மறந்தீர்கள்.
உங்கள் ஊரை விட்டு வேரடி மண்ணோடு புலிகள் பிடுங்கியெறிந்ததாக அரற்றித் திரிந்தீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
மேற்குலகம் வந்து சமாதானம் பேசிய பொழுது...
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசிய பொழுது,
உங்களுக்கும் அதில் சரி பாதி பங்கு வேண்டும் என்றீர்கள்.
இடைக்கால நிர்வாகத்திலும் பங்கு கேட்டீர்கள்.
பேச்சுவார்த்தை மேசையில் குந்தியிருக்க வேண்டும் என்று
நாண்டு பிடித்து நின்றீர்கள்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
ஆனால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.
வடதமிழீழத்திற்கும் மீண்டும் வாருங்கள்:
வந்து குடியமருங்கள் என்று உங்களுக்கு நேசக்கரம் நீட்டினோம். கிளிநொச்சியில் உங்களைக் கட்டியணைத்து மட்டின் பிரியாணி தந்தோம். வெறும் மட்டின் பிரியாணி அல்ல. ஹலால் மட்டின் பிரியாணி!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.
இருந்தும் என்னவாயிற்று! ஜிகாத் குழு என்ன கலைந்தா போயிற்று?
ஓசாமா குழு என்ன ஓடியா போனது?
முத்தலீப் என்ன சிங்களப் படையிலிருந்தா விலகினான்?
எங்கள் தலைவனுக்கு அருகிருந்து
மட்டின் பிரியாணி தின்ற உங்கள் ஹக்கீம்
தின்ற வாசனை அடங்கு முன்பே
தமிழ் இறைச்சியும், பிரியாணியும் தின்பதற்காக
மகிந்தவுக்கு அருகில் கொலுவிருந்தான்.
ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள்
புதையுண்டு போன பொழுது
நீங்கள் கண்மூடி நின்றீர்கள்.
நந்திக்கடலில் எங்கள் குருதி வழிந்தோடிய பொழுது
நீங்கள் மகிந்த பண்டாவுடன் கூத்தாடினீர்கள்.
எமக்கென்று யாருமே இல்லையா?
என்று நாங்கள் கதறியழுத பொழுது...
அரற்றிப் புலம்பிய பொழுது நீங்கள் எங்களை திரும்பியே பார்க்கவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்.
‘‘நாம் ஈழத்தமிழர்கள் அல்ல.
அரபு தேசமும், பாரசீகமும், பாகிஸ்தானும், சாவகமுமே
எங்கள் தேசம்’’ என்று நீங்கள் பெருமிதம் கொண்டீர்கள்.
‘‘தமிழ் நாங்கள் பேசும் மொழியேயன்றி நாம் தமிழர்கள் அல்ல:
இலங்கைச் சோனகர்கள்’’ என்று பறைதட்டினீர்கள்.
இப்பொழுது என்னவாயிற்று?
அளுத்கமவில் நீங்கள் அழுவது எங்களுக்குக் கேட்கிறது.
அச்சத்தில் உறைந்து உங்கள் பெண்களும்,
குழந்தைகளும் கதறுவதும்,
‘அல்லாவே எங்களைக் காப்பாற்றும்’
என்று உங்கள் ஆண்கள் இறைஞ்சுவதும்
அல்லாவிற்குக் கேட்கிறதோ, இல்லையோ,
நிச்சயம் எங்களின் காதுகளுக்குக் கேட்கிறது.
உங்களுக்காக நாங்கள் ஒரு கணம் இரங்குகிறோம்.
மனிதநேயம் கொண்டு உங்களை நினைக்கின்றோம்.
காலியில் எங்கள் கழுத்து அறுந்ததையும்,
கொழும்பில் நாங்கள் எரிந்ததையும் எண்ணிப் பார்க்கிறோம்.
நீங்கள் கைகட்டியும், வாய்புதைத்து நின்றதையும் அல்ல!
ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்க்கின்றோம். அராபியர்களாக அல்ல. பாரசீகர்களாக அல்ல.
பாகீஸ்தானியர்களாக அல்ல. சாவகர்களாகவும் அல்ல.
தமிழ் பேசும் முஸ்லிம்களாக...
இஸ்லாமியத் தமிழர்களாகவே, உங்களை நாங்கள் பார்க்கின்றோம். எங்களுக்காக... எங்களுக்கு உறுதுணையாக...
எங்கள் மண்ணை மீட்பதற்காக ஆயுதம் ஏந்திக் களம் புகுந்து
வீரப்போர் புரிந்து மடிந்த எங்கள் இஸ்லாமியத்
தமிழ் சகோதரர்களான லெப்டினன்ட் ஜுனைதீனையும்,
லெப்டினன்ட் காதரையும்,
ஆனந்தபுரத்தில் எங்கள் தலைவனைப் பாதுகாத்து மடிந்த
காதரின் அண்ணன் லெப்.கேணல் முகைதீனையும்
நாங்கள் மறக்கவில்லை.
யாழ் மண்ணை சூரியக்கதிர் கொண்டு சிங்களம் சுட்டெரித்த பொழுது எங்களுக்காகத் தாய்த் தமிழகத்தில் தீமூட்டித் தன்னுயிரை ஆகுதியாக்கிய வீரத்தமிழ்மகன் - இஸ்லாமியத் தமிழ்மகன்
அப்துல் ரவூப்பையும் நாங்கள் எவருமே மறந்துவிடவில்லை.
தமிழர்களோடு முஸ்லிம்கள் கைகோர்த்து நின்றிருந்தால்
எப்பொழுதோ தமிழீழம் மலர்ந்திருக்கும்.
இப்பொழுதும்கூட காலம் கடந்துவிடவில்லை.
ஹக்கீமையும், ஹிஸ்புல்லாவையும் தூக்கியெறிந்து விட்டு
ஜுனைதீனும், காதரும், முகைதீனும், அப்துல் ரவூப்பும்
நடந்த வழியில் வாருங்கள்.
எங்கள் மண் விடியும் நாளில் உங்களுக்கும் விடிவு கிட்டும்.
இல்லாது போனால் உங்களுக்கு சிங்களம் சமாதி கட்டும்.
சேரமான்
16 ஜூன் 2014
கோண்டாவிலில் காடைக்கும்பலின் வாள்வெட்டில் இளைஞர் பலி!
கோண்டாவில் பகுதியில் காடைக் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (வயது 21) என்ற இளைஞர் உயிரிழந்தார். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது - இன்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட காடையர்கள் வீட்டின் முன்பாக நின்ற சுகிர்தனைத் தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது சுகிர்தனின் உறவினர்கள் அவர்களில் இருவரைப் பிடித்துத் தாக்கியுள்ளனர். மற்றைய இருவரும் தப்பிச் சென்றனர். தப்பிச்சென்றவர்கள் மீண்டும் வேறு இளைஞர்களுடன் கத்திகள், பொல்லுகள் சகிதம் இவர்களின் வீட்டுக்கு வந்து ரவீந்திரனை வாளால் வெட்டியுள்ளனர். அவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மரணமானார். அவரது சகோதரனும் சகோதரியும் வாள்வெட்டுக் இலக்காகிக் காயமடைந்தனர். முற்பகையே இக்கொலைக்குக் காரணமெனத் தெரிவிக்கப்பட்டது. ரவீந்திரன் செந்தூரன் (வயது 23), ரவீந்திரன் இலக்கியா (வயது 26) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்கான யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை - இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோண்டாவில் பகுதி இளைஞர்களுக்கும் உரும்பிராய் மேற்குப் பகுதி இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகவும் உரும்பிராய் மேற்குப் பகுதியிலுள்ள வீடுகள் சில சேதமாக்கப்பட்டன எனவும் தெரிவிக்கப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர படைத்தரப்பும் பொலிஸாரும் இப்பகுதில் குவிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சித்தங்கேணி நபர் கொடூரமான முறையில் தற்கொலை!

15 ஜூன் 2014
சுதுமலை கொலை தொடர்பில் ஐவர் கைது!
யாழ். சுதுமலை பகுதியில் வயோதிபப்பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஐவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த கொள்ளை குழு வீட்டில் இருந்த இரண்டு பெண்களின் கைகள் மற்றும் வாய் என்பவற்றை கட்டிவிட்டு அவர்களின் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.
வாய் இறுக கட்டப்பட்டதால் வீட்டின் உரிமையாளரான குமாரலிங்கம் பத்மாவதி (வயது- 57) என்பவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.இதன்போது வீட்டில் இருந்த மற்றைய பெண்ணின் மகன் உட்பட ஐவரை சந்தேகத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மற்றையவர்கள் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
14 ஜூன் 2014
லா சப்பலில் இளைஞன் மீது வாள்வெட்டு!
பாரிஸ் லா சப்பல் பகுதியில் தமிழ்க் குழுக்களுக்கிடையிலான மோதலில் 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் லா சப்பல் பகுதி தமிழர்கள் நிறைந்த பகுதியாகும். தமிழர்களின் ஆதிக்கம் இங்கு வந்த பின் வாள்வெட்டு கத்திக்குத்து படுகொலை போன்ற வன்முறைகளும் பிரசித்தம் அடைந்துள்ளது. பாரிஸ் லா சப்பல் பகுதிக்கு அருகாமையில் உள்ள பிலிப் து ஜிராட் வீதியில் Rue Philippe-de-Girardகடந்த வெள்ளி இரவு இந்தக் குழு மோதல் இடம்பெற்றதாகவும் இருபது பேர் கோண்ட குழுவின் தாக்குதலில் 18 வயது இளைஞன் ஒருவர் தலையில் வாளினால் வெட்டப்பட்டும் சுத்தியலினால் தாக்கப்பட்டும் உயிராபத்தான நிலையில் உள்ளார் என்றும் பாரிசின் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.அவசர முதலுதவிச் சேவையினர் வந்த போது காயங்களின் கடுமையினால் இந்த இளைஞன் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் இன்னமும் உயிராபத்தான நிலையிலேயே உள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவமானது தமிழ் குழுக்களிடையேயான மோதலின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என நம்பப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருடர்களினால் உயிரிழந்த பெண்!
யாழ்,சுதுமலை வடக்கில் நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பெண்ணை மிரட்டிக் கட்டி வைத்துவிட்டு அகப்பட்டவற்றை சுருட்டிச் சென்றனர். கட்டிப் போடப்பட்ட பெண் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் உயிரிழந்தார். பத்மாவதி குமாரலிங்கம் (வயது 56) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார் என்று முற்கொண்டு கிடைத்த செய்திகள் தெரிவித்தன. ஆபத்தான நிலையில் மீடகப்பட்டு இன்று அதிகாலையில் யாழ்.மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
13 ஜூன் 2014
புலிகள் மீதான தடை சரியானதா?விசாரிக்கிறது மோடி அரசு!

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவிழா ஆரம்பமாகியது!
12 ஜூன் 2014
பளையில் குழுமோதல் கத்திக்குத்து!

11 ஜூன் 2014
வடக்கு,கிழக்குப் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!
வடக்கு,கிழக்கில் 40 வீதமான பெண்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி அலியான் சிபனலே இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதனால் பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பாக போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
10 ஜூன் 2014
வற்றாப்பளையில் சிறப்புற நடைபெற்ற பொங்கல் திருவிழா!

09 ஜூன் 2014
வடக்கில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்!
08 ஜூன் 2014
யாழ். நெடுந்தீவில் நேற்றிரவு 32 இந்திய மீனவர்கள் கைது!
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக 8 படகுகளில் வந்த 32 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீரியல் வள துறையினரிடம் கேட்டபோது,
கைது செய்யப்பட்டவர்களை தற்போது கடற்பரப்பில் இருந்து காங்கேசன்துறைக்கு கடற்படையினர் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
எனவே நண்பகல் அளவில் அனைவரையும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில் 8 படகுகளில் வந்த 42பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்று முன்தினம் எல்லை தாண்டிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 12பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
07 ஜூன் 2014
பாம்பு பெண் மருத்துவமனையில்!
யாழ்,பல்கலைகழக மாணவியின் சங்கிலியறுப்பு!
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி பயலும் மாணவியொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மாணவியின் துவிச்சக்கர வண்டியுடன் சிக்கியதால், அதனை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர்.
கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது. மாணவி சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் பின்பக்கமாக வந்தவர்கள் சங்கிலியை அறுத்துள்ளனர். மாணவியும் சங்கிலியை பிடித்துவிட்டார். இதனால் சங்கிலியின் ஒரு பகுதி மாணவியிடம் போக எஞ்சியது திருடர்களின் கைக்கு போனது. இந்த இழுபறியில் திருடர்களின் மோட்டார் சைக்கிளிலும் மாணவியின் துவிச்சக்கரவண்டியும் சிக்கிக் கொண்டன. வேறு வழியில்லாமல் களவாணிகள் இருவரும் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர். விடயம் காவல்த்துறைக்கு அறிவிக்கப்பட்டது.
அவர்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு ஆய்வு செய்தபோது அது நல்லூரில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்துள்ளது.
06 ஜூன் 2014
அச்சுறுத்தி மரணச் சான்றுகள் வழங்கப்படுகின்றன – கஜேந்திரன்!
வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான காணாமல் போன இளைஞர் யுவதிகளுக்கு என்ன நடந்தது என்று கடந்த ஐந்து வருடங்களாக உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.
அவ்வாறு உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த சிலர் முல்லைத்தீவில் அமைந்துள்ள நீதிமன்றிலே ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். இவ்வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும், சர்வதேசம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், ஐந்து ஆணடுகள் ஆகியும் சர்வதேசம் இதில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதை வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேசம் உள்ளக விசாரணை, உள்ளக விசாரணை என சிறீலங்காவுக்குச் சந்தர்பங்களை வழங்கிக்கொண்டு இருக்கின்ற இச்சூழலில் சிறீலங்கா அரசாங்கம் தனது இராணுவ இயந்திரத்தினைப் பயன்படுத்தி , காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை அச்சுறுத்தி, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குகின்ற செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றதே தவிர, காணாமல் போனோர் தொடர்பில் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய செயற்பாடுகளை இதுவரை சிறீலங்கா அரசாங்கம் செய்யவில்லை.
சர்வதேச அழுத்தத்திற்காக ஒரு ஆணைக்குழுவினை நியமித்துள்ளார்கள். அக்காணாமல் போன ஆணைக்குழு கூட புலிகளால் தான் இவர்கள் காணாமல் போனார்கள் என்ற உண்மைக்குப் புறப்பான வாக்கு மூலங்களை உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்களே தவிர, உண்மையில் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இருந்து உண்மையான கருத்துக்களை அறிந்து, சரணடைந்தவர்களை எந்த இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்களோ அவர்களை இனம்கண்டு அல்லது கடத்தலுடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய எந்த முயற்சிகளிலும் ஈடுபடுவதாக இதுவரை இல்லை.
05 ஜூன் 2014
கத்திக்குத்துக்கு இலக்காகி கணவன் - மனைவி காயம்!
கச்சாய் தெற்கில் இன்று இடம்பெற்ற திருட்டு முயற்சி ஒன்றின் போது முதியவர்களான கணவன் - மனைவி ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகினர். இன்று இரவு 8 மணியளவில் கச்சாய் தெற்குப் பகுதியில் கத்திகள், பொல்லுகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வீடொன்றுக்குள் புகுந்து திருட முற்பட்டபோது வீட்டில் உள்ளவர்கள் கூக்குரலிடவே வீட்டில் இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு வீட்டு ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் அம்பலவாணர் வேலுப்பிள்ளை (வயது 71) அவரது மனைவியான வேலுப்பிள்ளை காசிப்பிள்ளை (வயது 63) ஆகிய இருவரும் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
முல்லையில் போராட்டத்தில் காணாமற் போனோரின் உறவுகள்!
04 ஜூன் 2014
இந்தியரை நம்பக்கூடாது என பொங்கினாராம் மகிந்த!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ஜூனியர் விகடன் சுட்டிக்காட்டியுள்ளது. அதில், மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய ராஜபக்ச வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.ஏதோ என்னை நட்பு ரீதியாகத்தான் அழைத்தார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை மரியாதையாக நடத்தவில்லை.இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை.
முதல் சந்திப்பிலேயே நம்மை இப்படி நடத்துகிறார் என்றால், ஒரு வருடத்தில் நம்மை இருக்கும் இடம் தெரியாமல் இவர் செய்துவிடுவார்.எந்த இந்தியரையும் நாம் நம்பக் கூடாது என்று பொருமினாராம் ராஜபக்ச என்று சொல்லப்பட்டு உள்ளது.இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
03 ஜூன் 2014
விசாரணைக் குழுவின் தலைவி நவிபிள்ளை அம்மையார்!
சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணையின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் கோபி அற்றா அனான் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொபி அனான் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளராக இருந்தவர். ஆனால் இந்த விசாரணையின் அறிக்கை, அவருக்கு கீழ் பணியாற்றிய மனித உரிமைகள் ஆணையாளருக்கு வழங்கப்பட வேண்டும்.
எனவே இதனை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கான தலைமையை, தற்போதையை மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையே ஏற்றுக் கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் இன்னும் ஓரிரு மாதங்களில் மனித உரிமைகள் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக விசாரணை நடத்தி இருந்த மர்சூகி தருமான் அந்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நிலையில் நவநீதம்பிள்ளையே சிறிலங்காவுக்கு எதிரன விசாரணை குழுவுக்கு தலைமை வகிப்பார் என்று கூறப்படுகிறது.
02 ஜூன் 2014
முன்னாள் போராளி கைது!
சட்டவிரோத ஆயுதங்களை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளி ஒருவர் வாழைச்சேனைப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, குளத்துமடுவைச் சேர்ந்தவரான கண்ணமுத்து யோகராசா வயது (48 ) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். வாழைச்சேனை பொலிஸ் நிலையப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்படி நபர் அதே இடத்தில் உள்ள யானைவழங்கி எனும் வயல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கட்டுத்துவக்கு மற்றும் கைக்குண்டு ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் சில ஆயுதங்களை தான் மறைத்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
01 ஜூன் 2014
மோடிக்கு வாழ்த்து தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பேரணி!
நன்றி:மலரும்.கொம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)