
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
26 நவம்பர் 2017
உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட தலைவர் பிறந்தநாள் விழா!

24 நவம்பர் 2017
தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்!
13 நவம்பர் 2017
மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர் மட்டுமே பிரதான சுடர் ஏற்ற வேண்டும்!
1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.
2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.
3. பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக – லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.
4. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை – ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது. இதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
04 நவம்பர் 2017
துரைசிங்கம் பிறேமதாஸ் (பிறேம்)லண்டனில் காலமானார்!

புளியங்கூடல் அமரர் சாந்தலிங்கம் மற்றும் தவமணி மண இணையரின் இளைய மருமகனும் சாந்தலதாவின்(லதா)அன்புக் கணவருமான துரைசிங்கம் பிரேமதாஸ்(பிறேம்)நேற்று நள்ளிரவு லண்டனில் காலமானார் என்ற செய்தி கூடலூர் மக்களையும் அவரது நட்பு வட்டங்களையும் பெரும் அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கிறது.இளம் வயதில் சாந்தலதாவும் அவரது ஏக புதல்வியும் சந்தித்திருக்கும் இந்தப் பேரிழப்பை ஈடு செய்ய எவராலும் இயலாது.இவர்களை எண்ணிப்பார்க்கும்போது எமது நெஞ்சமே வெடித்து விடும்போல் இருக்கிறது.இனி எப்படித்தான் அந்த அன்புத்தங்கையோடு பேசமுடியும்?மனமெங்கும் அன்பை மட்டுமே சுமக்கும் லதாவை நாம் எப்படித்தான் தேற்றமுடியும்?இந்த மரணச் செய்தியின் அதிர்ச்சசியில் இருந்து மீளமுடியவில்லை.பிறேம் அவர்களின் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற புளியங்கூடல்.கொம் எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)