![]() |
தமிழினி |
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
26 ஜூன் 2013
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை!
25 ஜூன் 2013
பாடசாலைச் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!
கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றில் 8 வயது மாணவியொருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக்கிளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அதன் இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை கணிதபாட ஆசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வகுப்பறையில் பயிற்சிக்காக கணக்கு ஒன்றை தவறாகச் செய்த காரணத்தால் குறித்த ஆசிரியர் மாணவியின் இரண்டு கால்களிலும் பிரம்பால் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கண்டல் காயம் காரணமாக குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் கிளை முன்னெடுத்துள்ளது என கனகராஜ் மேலும் தெரிவித்தார்.
24 ஜூன் 2013
யாழில் சிங்கள மாணவரிடையே மோதல்!
யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் தென்பகுதி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.யாழ்,நாகவிகாரையில் நடைபெற்ற பொசன் நிகழ்வில் மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நாகவிகாரையில் இடம்பெற்ற பொசன் நிகழ்வுக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்பகுதியைச் சேர்ந்த விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களும்,முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவர்களும் சென்றனர்.இதன்போது இரண்டாம் வருட மாணவர்களுக்கு உரிய மரியாதையை முதலாம் வருட மாணவர்கள் வழங்கவில்லை என்று முரண்பாடு எழுந்தது.இந்த முரண்பாட்டின் எதிரொலியாக முதலாம் வருட மாணவர்கள் விகாரையால் திரும்பி பரமேஸ்வராச் சந்தியில் பஸ்ஸால் இறங்கியபோது தாக்கப்பட்டனர்.முதலாம் வருட மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கை,கால்காளாலும் தலைக் கவசங்களாலும் சரமாரியாகத் தாக்கினர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் களேபரம் ஏற்பட்டது.தென்பகுதி மாணவர்களின் மோதலால் பரமேஸ்வராச் சந்தி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. இதன்போது எட்டு மாணவர்கள் வரை காயமடைந்ததாகக் கூறப்பட்ட போதும் நால்வரே காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.பி.ஏரத் (வயது 20), கே.திலக்ஷன (வயது 22), டி.ஜெயரங்க(வயது 23),எஸ்.லக்மண (வயது 22)ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர்.இதனையடுத்து விஞ்ஞானபீட இரண்டாம் வருட தென்பகுதி மாணவர்கள் 6 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொலிஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
23 ஜூன் 2013
துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் ஓட்டமாவடி பாலத்தடியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்வதற்காக சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற பொலிஸார் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து பிடித்து சோதனையிட்ட போது அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
பேத்தாளை பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் வந்த சீலன் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
22 ஜூன் 2013
குடாநாட்டு வர்த்தகர்களிடம் பொலிஸ் கப்பம்!
![]() |
யாழ்ப்பாணம் |
ஜெர்மன் எசன் நகரில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!
ஜெர்மன் எசன் அல்றண்டோர்ப் பகுதியில் உள்ள தமிழர் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் எமக்கு தகவல் தருகையில்,சென்ற ஞாயிற்றுக்கிழமை(16.06.2013)காலையில் தேவாலையம் சென்றிருந்ததாகவும் பின்னர் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய வேளை வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த நகைகள் கொள்ளையிடப் பட்டிருந்ததாகவும் இத்தனைக்கும் தாம் குடியிருப்பது பத்தாவது மாடியில் என்றும் தெரிவித்தார்.கொள்ளையர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் தமக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.எசன் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.
21 ஜூன் 2013
சிங்களவனை அடித்து விட்டார்கள் கூக்குரலிடுகிறது சிங்கள அமைப்பு!
![]() |
கார்டிப் மைதானம் லண்டன் |
20 ஜூன் 2013
லண்டன் மைதானத்தில் புலிக்கொடிகளுடன் புகுந்த தமிழர்கள்!
19 ஜூன் 2013
தமிழர்களின் வீடுகளை எரித்து காடையர்கள் அட்டகாசம்!
நன்றி:தினக்கதிர்
மன உளைச்சல்தான் மணிவண்ணன் மரணத்துக்கு காரணம்! - சீமான்

இனமானத் தமிழன் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் தனது வீர வணக்கத்தை செலுத்துகின்றது.
02 ஜூன் 2013
தேர்தல் அறிவித்ததும் தமிழரசு கட்சி முடிவெடுக்க தீர்மானம்!

01 ஜூன் 2013
ஒசாமாவை கொல்ல உதவிய சாவகச்சேரி தமிழர்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)